ஆடி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:
ஆடி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் புதன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஆடி மாதம் 08 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆடி 22 ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள சுக்கிர பகவான் வக்கிரமடைந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஆடி மாதத்தின் முதல் பாதி மகர ராசியினருக்கு சற்று சிரமம் தான். அதாவது சிறுநீரக பிரச்சனை, வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கோளாறு, பணத்தை பறிகொடுத்து ஏமாறுவது, வண்டி வாகன செலவு அல்லது விபத்து ஏற்படும் வாய்ப்பு போன்ற சிக்கல் ஏற்படலாம். இதற்கு மாறாக ஆடி மாதத்தின் அடுத்த பாதியில் அனைத்துமே சீராகி விடும். மேலும் 7 ஆம் இடத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் வக்கிரமடைவதால் வாழ்க்கைத் துணையின் உதவியுடன் எதையும் கடந்து வர முடியும். புதிய லாபகரமான தொழில் ஆரம்பிக்கும் சூழல் ஏற்படும். இதுவரை முயற்சி செய்தும் சரியாக நடக்காத காரியங்கள் இந்த ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெறும்.
கும்ப ராசியினருக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எதுவுமே சரியாக நடக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த ஆடி மாதம் உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும். வாழ்க்கைத் துணையின் அறிவுரைகளை கேட்டு நடப்பதால் எல்லாம் நல்லதாவே நடக்கும். இடமாற்றத்திற்கு அருமையான மாதம் இது. மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசாங்க வேலை வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் நற்செய்தி நிச்சயம் உண்டு. தந்தை - பிள்ளைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். வியாபாரிகள் புதிய தொழில் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்.
ஏதேனும் ஒரு வழியில் மற்றவர்களுக்கு பணம் தரும் சூழல் உண்டாகும். காதல், பெண் அல்லது குழந்தைகள் ஆகியோரால் பிரச்சனை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடி மாதத்தின் முதல் பாதியில் தனவராவிற்கு எந்த பஞ்சமும் இல்லை. பிடித்த படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் அசால்டாக தேர்ச்சி பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறியே தீரும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வழக்குகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். எந்த ஒரு காரியத்திற்கும் பொறுமை காப்பது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…