ஆவணி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:
ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஆவணி 18 ஆம் தேதி குருபகவான் வக்கிரமடைகிறார். அதேபோல், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்கிரமடைந்து, வக்கிர நிவர்த்தியடைகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
நினைத்த காரியம் நினைத்தப்படி நிறைவேறும். குழந்தைக்காக காத்திருந்த தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எண்ணிய பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புது வீடு அல்லது மனை வாங்கக் கூடிய அதிர்ஷ்டம் உண்டு. பலநாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். கடன் தொல்லையில் தப்பிக்க பூர்வீக சொத்து மூலம் பணவரவு ஏற்படும். மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். திருமண வயதில் இருக்கும் மேஷ ராசியினருக்கு, திருமண பாக்கியம் கைக்கூடும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக நாட்டம் ஏற்படும்.இருப்பினும், வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு பணியிடத்தில் முக்கியமான பணியில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
யாருடன் பேசுவதாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டும். குறிப்பாக, மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வதை தவிர்க்கவும். ஆண்கள் பெண்களால் சில அலைச்சல், சிரமங்ளை சந்திக்க நேரிடும். பெண்கள் மூக்கு, தொண்டை சம்பந்தபட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், வண்டி, வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை. பணியிடத்தில் சகஊழியர்களிடம் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தமான முக்கியமான படிவங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் லாபம் இருக்காது. நினைத்த காரியங்கள் தடைபடும். வீடு, மனை வாங்குவதில் தடை, தாமதம் ஏற்படும். இருப்பினும், தாயார் வழியில் ஆதாயம் உண்டு. வங்கி துறையில் பணிபுரிவோருக்கு சிறப்பாக இருக்கும்.
எதிர்பார்த்த விதத்தில் நல்ல வரன் கிடைக்கும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் சாதகப் பலன் உண்டு. பங்குச்சந்தை தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். திடீர் பிரயாணங்கள் செய்வீர்கள். சிலருக்கு மின்சாரம் சார்ந்த துறையில் வேலைக்கிடைக்கும். ஆன்லைன் மூலமாக செய்யக்கூடிய அனைத்து வியாபாரம் லாபத்தை தரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்ல முறையில் நடக்கும். கடன் பிரச்சனையில் இருந்து சற்று ஓய்வு கிடைக்கும். குடும்ப விஷயத்தை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்வது தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பெண்களுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். அதிகளவு பணம் முதலீடு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து சார்ந்த விவகாரங்களில் எச்சரிக்கை வேண்டும். தாய்மாமன் வழியில் வீண் பிரச்சனை வரலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…