ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் கடக ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த மாதத்தில் அதிகமான கிரகங்கள் பார்க்கக் கூடிய ராசி என்றால் அது கடகம் தான். இதனால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் மீண்டும் விவேகம் பெறும். தொழிலில் இருந்த வந்த சிக்கல்கள் விலகும். மனதில் இருந்த சங்கட நிலை அகலும். அனைத்து செயல்களிலும் தெளிவான மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். பிள்ளைகளால் பாராட்டு கிடைக்கும். வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொண்டால் அற்புதமான பலன்களை பெறலாம்.
மறைமுகமாக முதலீடு செய்த பணம் இரண்டு மடங்காக கைக்கு வரும். மேலும், சகோதரர் சகோதரிகளுக்கு உங்களால் பல நன்மைகளை அடைவார்கள். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்படுவதால், அனுகூலப் பலன்களை பெறுவீர்கள். வியாபாரம் செய்ய பணஉதவி எதிர்பார்த்திருந்தால் நிச்சயம் கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் சுபசெய்தி வந்து சேரும்.
அதேபோல், தாய் வழி உறவினர்களிடம் இருந்த வந்த மனகஷ்டங்கள், பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக கைக்கு வராத கடன்கள் அனைத்தும் வந்தடையும். சிலருக்கு கடன் பிரச்சனை தலைக்கு மேல் இருந்திருக்கும். அவை அனைத்தும் அடைத்துவிடுவீர்கள். அதற்கான உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நலம் பெறும். தொழில் ஸ்தானதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால், கூட்டு தொழில், சுய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
பெண்களுக்கு முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். அரசியல் துறையில் இருப்பவர்கள் மட்டும் எதையும் நிதானத்தோடு எச்சரிக்கையோடும் இருப்பது நல்லது. பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் சுமூகமான முறையில் முடிவடையும். சுபவிரைய செலவுகள் உண்டாகும். அனாவசிய செலவை தவிர்ப்பது நல்லது. அதேபோல், பெயர் தெரியாவர்களிடம் பேச்சை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 5, 9
சந்திராஷ்டம நாள்: 23, 24
பரிகாரம்: தினமும் அம்மன் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…