ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
மாதத்தின் தொடக்கத்திலேயே ராசி அதிபதியான சூரியன் உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், தந்தையின் தொழிலை நீங்க எடுத்து நடத்த வேண்டும் என்று விருப்பப்பட்டால் இது சரியான நேரம். இருப்பினும், மாதத்தின் தொடக்கத்தில் சுமார் 8 நாட்கள் நம்ம உண்டு நம்ம வேலை உண்டு என்று இருந்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதாவது, மற்றவர் விஷயத்தில் தலையிடுவது, மற்றவர்களை பற்றி குறைக்கூறுவது, விளையாட்டான பேச்சு போன்றவற்றை தவிர்க்கவும்.
10ஆம் தேதிக்கு பிறகு சிறப்பான பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும். அதேபோல், இந்த மாதத்தில் நீங்க எந்த நல்ல காரியங்களில் ஈடுபட்டாலும், அது வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதுதெம்பு பிறக்கும். திறமையை வெளிபடுத்த பல வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படும். இருப்பினும், சகஊழியர்களிடம் பணிவான பேச்சு அவசியம்.
திருமண வாழ்க்கையில் அன்னோன்னியம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். காப்பீட்டு நிறுவனத்திலிருந்து தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். பால் பொருட்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு அதிர்ஷ்டமான மாதம். அதேபோல் விவசாயம் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் அடுத்தவரை நம்மி பெரிய தொகையை முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், இந்த மாதத்தில் கண்ட சனியின் ஆதிக்கம் வரப்போவதால், கால், மூக்கு, தொண்டை தொடர்பான வியாதிகளை உண்டாக்கும்.
கண்ட சனி காலத்தில் சகோதரர்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள கூடாது. ஒருவேளை பணம் வாங்கியிருந்தால் கொடுத்துவிடுங்கள், பணம் கொடுத்திருந்தால் சனிப்பெயர்ச்சிக்கு முன்னாடியே வாங்கிவிடுவது நல்லது. இதனால், தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதேபோல், சனிப்பெயர்ச்சிக்கு பிறகு கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் வரும்.
எனவே, ஆண்கள் விஷயத்தில் பெண்களும், பெண்கள் விஷயத்தில் ஆண்களும் தடமாறாமல் இருப்பது உத்தமம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தீயப் பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. எப்படியாபட்ட காரியமாக இருந்தாலும் பொய் மட்டும் சொல்லிவிட வேண்டாம். அப்புறம் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 2, 5
சந்திராஷ்டம நாள்: 25, 26
பரிகாரம்: தினமும் காலையில் குளித்துமுடித்துவிட்டு சூரியபகவானை வழிபாடு செய்துவிட்டு பணியை தொடங்கலாம். சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…