ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சுக்ரனை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசியினரே! உங்க ராசிக்கு 4வது வீட்டில் சுக்ரன் இருப்பதால், சுகஸ்தானத்தில் பிரச்சனைகள் ஏற்படும். உடல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படலாம். எவ்வளவு கஷ்டப்பட்டு கைகூடி வரும் செயல்கள் அனைத்தும் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்கும். திடீரென வண்டி, வாகனம் செலவு வைக்கும். பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக சின்ன சின்ன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தேவையில்லாத செலவுகள் ஒன்றன் பின்னாக வந்துக்கொண்டே இருக்கும். இருந்தாலும், செலவுகளை சமாளிக்கின்ற அளவிற்கு பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், மாதத்தின் இரண்டாவது பகுதி அப்படியே ஆப்போசிட்டாக இருக்கும். குறிப்பாக, 12ஆம் தேதிக்கு பிறகு அற்புதமாக பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிரிகள் மறைந்து போவார்கள்.
எதிர்பாராத உதவிகள் தேடி வரும். திருமண தொடர்பான முயற்சிகள் ஈடேறும் மாதம். பெற்றோர் சம்மதத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் காதலர்கள் இது ஒரு அற்புதமான காலக்கட்டம். அதாவது, துலாம் ராசி காதலர்கள் திருமண உறவில் நுழைய வாய்ப்புகள் உண்டு. அதேபோல், சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வாழ்க்கையில் திடீரென்ற சில திருப்பங்கள் நிகழும். தொழில் ரீதியாக நாட்டம் அதிகரிக்கும்.
ராசியில் கேதுவும், 7வது வீட்டில் ராகுவும் இருப்பதால் திருமண வாழ்க்கையில் அடிக்கடி திடீர் பஞ்சாயத்து உருவெடுக்கும். எண்ணெய் வித்துக்கள் தொழில் செய்வோருக்கு லாபம் இரட்டிபாகும். விஷ சந்துக்களால் ஆபத்து வர வாய்ப்புள்ளதால் இரவு நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஆக மொத்தம் இந்த ஜனவரி பல நாள் கஷ்டத்தை தீர்க்க வந்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
பரிகாரம்: தினமும் குலதெய்வத்தை மனதில் நினைத்துவிட்டு பணியை தொடங்குங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபமும், வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு நெய் தீபமும் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
சந்திராஷ்டம நாள்: 5, 6, 30, 31
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…