ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் கடக ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த ஏப்ரல் மாதத்தில் ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சஞ்சாரங்கள் நிகழ்கிறது. இதில் இரண்டாம் இடமான சூரிய பகவானும் கடக ராசியினருக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் பலனாக, வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தனம் உண்டாகும். நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கக்கூடிய மாதமாக இந்த ஏப்ரல் மாதம் அமைகிறது.
ஆனால், உங்களது உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகளின் உடல்நலத்திலும் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்ல வேண்டும். முக்கியமாக, பெரியவர்களை மதிக்க வேண்டும். பெரியவர்களின் அனுக்கிரகங்கள் மட்டுமே உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மகிழ்ச்சி, பொருளாதாரம் என அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
வழிபாடு: சிதம்பரம் நடராஜர் பெருமாள் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு சிறப்புப் பலன்களைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…