ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
துர் ஸ்தானத்தில் 4 கிரகங்களின் சேர்க்கையால் வண்டி, வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் உடல்நிலம் சரியில்லாமல் போகும், வாழ்க்கை துணையிடம் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்படும். எனவே, வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை, நிதானம் தேவை. முடிந்தவரை நீண்ட தூரப் பிராயணங்களை தவிர்ப்பது நல்லது. இரத்தம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் உடல்நலத்தில் ரொம்ப அக்கறை காட்ட வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் எச்சரிக்கை வேண்டும். உணவு சம்பந்தமான தொழில் செய்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
இப்படி ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் திடீர் யோகம் ஏற்படலாம். பணியிடத்தில் திடீர் பதவி உயர்வு ஏற்படுடலாம். தந்தையின் தொழிலை கையில் எடுக்கக் கூடிய மாதமாகவும் இருக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் திருமண சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நட்பு வட்டாரம் ஏற்படும். கடன் தொல்லை நிவர்த்தியாகும். பூமி, மனை, வீடு வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…