Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இருக்குற இடத்துல இருந்துட்டா பிரச்சனை இல்லை எது செஞ்சாலும் கவனமா செய்யுங்க | Kumbam April Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
இருக்குற இடத்துல இருந்துட்டா பிரச்சனை இல்லை எது செஞ்சாலும் கவனமா செய்யுங்க | Kumbam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இருக்குற இடத்துல இருந்துட்டா பிரச்சனை இல்லை எது செஞ்சாலும் கவனமா செய்யுங்க | Kumbam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

தற்போது இருக்கும் வேலை, தொழிலில் லாபம் எப்பையும் போல இருக்கும். ஆனால் அதனை தாண்டி வேலை மாற்றம், தொழில் வளர்ச்சிக்கான முயற்சி, முதலீடு என்று எதையும் செய்ய வேண்டாம். அது உங்களுக்கு பெரிய சிக்கலில் கொண்டு போய் சேர்த்துவிடும். கடிமான உழைப்பை செலுத்துவீர்கள் ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க சற்று கால தாமதம் ஆகலாம். எனவே, மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் நீங்கள், உங்கள் குடும்பம், உங்கள் வேலை என்று சென்றால் மிகவும் நல்லது. படிப்பில் மாணவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

இருக்குற இடத்துல இருந்துட்டா பிரச்சனை இல்லை எது செஞ்சாலும் கவனமா செய்யுங்க | Kumbam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

குடும்பத்தில் இருப்பவர்களால் செலவு வரலாம். அது நல்ல காரியத்திற்காக இருந்தால் மகிழ்ச்சியாக செய்யுங்கள். மேலும் இந்த மாறி சூழ்நிலையில் இல்லாதவர்களுக்கு தானம் தர்மங்கள் செய்து வருவது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் எந்த கவலையும் வேண்டாம் அருமையாக உள்ளது. இல்லத்தரசிகளுக்கு சுப காரியங்களால் அலைச்சல் ஏற்படலாம். திருமணம் ஏற்பாட்டால் எந்த ஒரு முடிவும் கிடைக்காமல் இருக்கும். தம்பதிகளுக்கு இடையில் மகிழ்ச்சியும் இல்லாமல் சண்டையும் இல்லாமல் ஒரு மாறி போய்க்கொண்டிருக்கும். தங்கள் நினைத்தது செய்ய முடிய வில்லையே என்று ஒரு வருத்தத்தில் இருப்பீர்கள். இருப்பினும் கவலை வேண்டாம் சரியான நேரம் வரும் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்