ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் மகரம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
என்னடா வாழ்க்கை, வேலை தினமும் ஒரே மாறியே இருக்கு என்று நினைப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சி சரியானதா என்பதை மட்டும் சிந்தித்து செயல்படுங்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அல்லது பொருள் வாங்குவது போன்றவற்றால் செல்வது அதிகரிக்கும். இருப்பினும் வரவு நன்றாக இருக்கும். அதாவது வராத உங்களின் பணம் கூட உங்களை வந்து சேறும். வேலை மாற்றத்திற்காக காத்திருந்தால் நிச்சயம் நிறைவேறும். கையில் பண புழக்கம் இருந்தே இருக்கும் இந்த ஏப்ரல் மாதத்தில்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஏதேனும் ஒரு கவலையுடன் இருப்பீர்கள். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம், வேலை செய்யும் இடத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கலாம், வீட்டில் வயது முதிர்ந்தவரை பார்த்துக் கொள்ளும் சூழ்நிலையில் இருக்கலாம். இப்படி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஏதேனும் ஒரு கவலை அல்லது சுமை இருந்து கொண்டிருக்கும். மாணவர்கள் நல்ல தெளிவுடன் தங்களின் எதிர்காலத்தை நோக்கி செல்வார்கள். எப்பையும் போல வீட்டில் இருப்பவர்கள் இல்லத்தரசிக்கு எந்த ஒத்துழைப்பும் செய்யாமல் இருப்பார்கள். இதனால் மன வேதனை ஏற்பட்டாலும் நீங்கள் செய்து கொண்டிருப்பதை செய்யுங்கள் போக போக அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். பித்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. யார் கிட்டையும் அல்லது யாரை நம்பியும் வாக்குறுதி தராதீர்கள், அதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…