ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இந்த ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் நான்கு கிரக சேர்க்கை நடைபெற உள்ளது. சூரியன், ராகு, புதன், சந்திரன் நான்கு கிரகங்களும் இணைகிறது. சோபகிருது வருடம், ஏப்ரல் மாத தொடக்கம், நான்கு கிரக சேர்க்கை என அனைத்தும் ஒரே நேரத்தில் நடப்பதால் மேஷ ராசியினரின் வாழ்வில் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். பதவி உயர்வு உண்டாகும். செல்வந்தர்களாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீடு வாங்கும் யோகம் உள்ளது.
எதிர்பார்த்ததை விட, எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும். இது நாள் வரை, நீங்கள் செய்த புண்ணியங்கள் உங்களுக்கான நன்மைகளைத் தரக்கூடியதாக அமைகிறது. சகோதரர்களின் உடல் நலத்தில் கவனமாக இருப்பது அவசியம். தைரியமாக இருக்கலாம்.
வழிபாடு: முருகப்பெருமானுக்கு சந்தனம் வழங்கி வழிபடுவது சிறப்பைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…