ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, சூரியன் மற்றும் குரு சேர்க்கை உங்களுக்கு நன்மையைத் தரும். மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை, குழந்தை வரம் வேண்டி விரும்புவோர்களுக்கு குழந்தை பிரார்த்தம் கிடைக்கும். தந்தை வழியில் நல்லது கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு உறவுகள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
ஏப்ரல் 14-க்குப் பிறகு, 4 கிரக சேர்க்கை நடைபெறுவதால், உடல் நிலை மோசமாகலாம். வரவு விட செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த கால கட்டத்தில் முருகப் பெருமானுக்கான தான தர்மங்கள் சிறப்பைத் தரும். மலைமேல் இருக்கக் கூடிய முருகன் கோவிலுக்குச் செல்வது, தான தர்மங்கள் செய்வது நன்மையைத் தரும். தேவையில்லாத அலைச்சல்கள், தாமதங்கள், விரயங்கள் போன்றவை ஏற்படும். முடிந்த வரை எச்சரிக்கையுடனும், உஷாராகவும் இருக்க வேண்டும்.
வழிபாடு: முருகப் பெருமானின் வழிபாடு ஏற்றத்தைத் தரக்கூடியதாக அமையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…