பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மிதுனம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் மிதுனம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
பிள்ளைகளால் கவலை ஏற்படும். புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும். குடும்பத்தை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு இருக்கும். கோபத்தால் யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். முடிந்த வரை அனுசரித்து பிரச்சனையை முடித்துக்கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு குழப்பத்திலையே இருப்பீர்கள். மன நிம்மதி இல்லாமல் ஏதோ ஒரு யோசனையில் இருப்பீர்கள். அதிக ஆசையால் ஏதேனும் ஒரு தேடலில் இருப்பீர்கள். நீங்கள் நினைத்த காரியத்தை நோக்கி பயணிக்கும் போது எதிர்பாராத தடங்கல் ஏற்படும்.
எந்த ஒரு காரியத்தை செய்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதிக கோபத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வந்து சேரும். அதனால் தேவையில்லாத இடங்களில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் தீர ஆலோசித்து நடைமுறை படுத்துவது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கண் சம்மந்தமான கோளாறுகள் ஏற்படலாம். தம்பதிகளுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே,ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போனால் வாழ்க்கை நன்றாக இருக்கும். பணம் அல்லது பொருள் சார்ந்து இழப்பீடுகள் இருக்கலாம்.
மனதில் ஏதேனும் குழப்பத்துடன் இருப்பீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பலன்கள் சற்று காலதாமதத்துடன் வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுப காரியங்கள் நடைபெறும் காலமாக அமையும். உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியை சீரமைக்கும் முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆசியால் அனைத்து காரியமும் கை கூடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6, 9
சந்திராஷ்டம நாள்: 17, 18
பரிகாரம்: தினசரி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை பொருளாக கொடுத்து உதவுவது சிறப்பான பலன்களை தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…