மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசியினரே! இந்த மாதம் 6 ஆம் இடத்தில் இருக்கும் உங்க ராசி அதிபதி உங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சிகரமான சூழல்கள் உருவாக்குவார். உத்தியோகத்தில் இத்தனை நாட்களாகபட்ட கஷ்டத்திற்கு உண்டான பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரியிடம் இருந்த சங்கடங்கள் விலகி, ஆதரவு பெருகும். இருப்பினும், சனி பகவான் உங்க ராசிக்கு 5ஆம் இடத்தில் இருப்பதால், ஏற்கனவே செய்துக்கொண்டிருந்த வேலையை விடக்கூடிய சூழலும் ஏற்படும். ஆனால், அது உங்களுக்கு சாதகமாக தான் இருக்கும்.
இந்த மாதத்தில் போட்டித் தேர்வுகளில் இறங்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவரவு சுமாராக இருப்பதால் குடும்ப பொறுப்புகளை சாமாளிக்க நிறைய கடன் வாங்கக்கூடிய சூழல் உருவாகும். இருந்தாலும், ஓரளவுக்கு கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளவும். மருத்துவப் பிரிவில் பணிபுரிவோருக்கு அனுகூலமான மாதம். படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, பெற்றோர்கள், ஆசிரியர்களின் பாராட்டை பெறுவார்கள்.
கண் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கூர்மையான பொருட்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, நிதானத்தோடும் கவனத்துடனும் இருப்பது நல்லது. சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அற்புதமான காலம். எலியும் பூனையுமாக இருந்த தந்தை, மகன்களுக்கு இடையே அன்பு, ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவர வாய்ப்புள்ளது. ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
காதலர்கள் தம்பதிகளாக மாறுவீர்கள். நட்பு வட்டாரத்தால் அனுகூலம் உண்டாகும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக இருந்தால் 15 ஆம் தேதி பிறகு செய்யலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் அதிகம் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தாய்மாமன் வழியில் அற்புதமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். இருப்பினும், 7ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு, சங்கடங்கள், சஞ்சலங்கள் ஏற்படும். சிலர் பிரிந்து வாழக்கூடிய நிலையும் உண்டாகும். அனுசரித்து போவது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம்: சிவ பெருமான்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
சந்திராஷ்டம நாள்: மாசி 14 ஆம் தேதி மாலை 03.20 மணி முதல் மாசி 16 ஆம் தேதி இரவு 12.14 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…