பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி, மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
பங்குனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒன்றை இழந்து, ஒன்றை பெறுவதற்கான அதிர்ஷ்ட யோகம் கிடைக்கும் மாதம். ஆனால், 8 ஆம் இடமானது துர்ஸ்தானம். இதில் குரு, சுக்கிரம் சேர்ந்து காணப்படுவது வீட்டில் பிரச்சனைகளைத் தரும். வண்டி, வாகனங்கள் ஒட்டுவதில் அதீத கவனம் தேவை. வீட்டில் பெரியவர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் அதிக கோபத்துடன் செயல்படுவீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பைத் தரும்.
அதே சமயம், இந்த மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும் மாதமாக அமைகிறது. இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த மாதம் ஏற்றது. மிகப்பெரிய ஆளுமையைப் பெறக்கூடிய மாதமாக உள்ளது. வீட்டுப் பக்கத்தில் உள்ள எல்லைக் காவல் தெய்வங்களை வழிபட்டு படையல் போடுவது சிறப்பைத் தரும். அதன் பிறகு, புதிய காரியங்களைத் தொடங்கலாம். அடுத்தவர்களை நம்ப வேண்டாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களின் உடல்நிலையில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வழிபாடு: காலபைரவர் வழிபாடு உங்களுக்குச் சிறப்பைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…