பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மகரம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி, மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் மகர ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
வீடு மாற்றத்திற்கான அமைப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த மாறி புதிய வேலை அல்லது வேலை இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் வரும். புதிய தொழில் மேற்கொள்ளும் சிந்தனை வரலாம், இருப்பினும் கவனமாக செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு நல்ல விஷயம் அதாவது சுப நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் அமைப்பு இருக்கிறது.
நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கும் தம்பதிகளுக்கு குழந்தை பிறகும். சொந்தத்தில் இருக்கும் பெண்களுக்கு சிறிய ரத்த காயம் ஏற்படலாம், ஆகையால் கவனம் தேவை. பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் அமையும் காலம் இது. ப்ரோடக்ஷன் சார்ந்து வேலை செய்பவர்களுக்கு அருமையாக இருக்கும். கூலி தொழிலாளிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். உடல்நிலையில் கவனம் தேவை, ஒழுக்கத்தில் சீராக இருக்க வேண்டும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…