பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி, மீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
உங்க ராசிக்கு 2ம் இடத்தில் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் செய்வதால், சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்க பேச்சை கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொல்லை அறவே விலகும். உடல்நல கோளாறு விலகி முன்னேற்றம் ஏற்படும். விவசாயம் தொழில் செய்வோருக்கு பொற்காலம். பொருளாதார ரீதியாக இருந்துவந்த கவலைகள் விலகும்.
அசையா சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டு. வங்கி ஊழியர்கள், வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், தகப்பனார் வழி சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கம் விலகும். தடைப்பட்டு வந்த திருமண பேச்சுக்கள் நல்ல முறையில் நடந்து முடியும். சுயதொழில் செய்வோருக்கு அமோகமான லாபம் உண்டு. இருப்பினும், எதிரிகள் மூலமாக தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும். நட்பு வட்டாரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண்கள் இரவு நேரத்தில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வழிபாடு: மாசாணி அம்மம் வழிபாடு செய்வது ஏற்றத்தை கொடுக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…