பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: துலாம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
இதுவரை மந்தமாக இருந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலனைப் பெறப்போகிறார்கள். மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும். வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை, இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்ல நிலைமையை அளிக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு, ராகு கேது அமர்வினால் இதுவரையிலுமே தடைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதே சமயம், திருமணம் நடைபெறுவதற்கான காலம் இது சரியானதாக இல்லை. குடும்பத்தில் பிரச்சனைகள் இருப்பது தொடர்ந்து உள்ளது. ஆனால், இது பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என நம்பலாம். ஆனால், அதற்கு நம் உறுப்புகளைக் கட்டிப்போட்டு இருப்பது போல, எந்த பிரச்சனை வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களைத் தரும். இருப்பினும், மனதில் சிறிது குழப்பங்களுடன் செயல்படுவீர்கள். எனவே, முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்துத் தெளிவாக முடிவெடுக்க வேண்டும். படிப்பதில், உங்களை முழுவதுமாக ஈடுபடுத்திப் படிப்பது நன்மையைத் தரும்.
இல்லத்தரசிகள் உடல் நலத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வயது மூத்தோர்களுக்கு நிறைய விஷயங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். 2023 பிப்ரவரியில் அற்புதமான பலன்கள் கிடைக்கவில்லை என்றாலும், சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்குக் கிடைக்கும். இதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு, வாழ்ந்தால் எல்லா வித பிரச்சனைகளும் நீங்கி அற்புதமான வாழ்க்கையைத் தரும். தேவையில்லாத அலைச்சல்களைத் தரும். எனவே, வீண் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் பகை ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதால், கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். குரு பெயர்ச்சி வரைக்கும் இந்த நிலை நீடிக்கும். குரு பெயர்ச்சியினால், நல்ல அதீத பலன்களைப் பெறுவீர்கள்.
எண்ணங்கள் தடுமாறும் சூழ்நிலை உண்டாகும். அந்த சூழ்நிலை உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பது நல்லதைத் தரும். இது உங்களுக்குப் பக்கபலமான நிலையை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 6, 9
சந்திராஷ்டம நாள்: 1, 27, 28
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுதல் நல்லது. வியாழன் தோறும் குரு பகவானுக்கு விளக்கு ஏற்றுதல் நற்பலன்களைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…