பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது.
இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
உங்க ராசியிலேயே சனி பகவானும், சுக்கிர பகவானும் இணைந்து சஞ்சாரம் செய்வதால், பலவிதமான கவலைகளை கொடுத்து அனுபவ பாடங்களை கற்றுக்கொடுக்கும் மாதமாக இருக்கும். மேலும், ஜென்ம ஆரம்பமாகியிருப்பதால் ஆபத்து நிறைந்த காலக்கட்டமாக இருக்கும். எனவே, எதிலும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நெருப்பு மற்றும் விஷத்தால் கண்ட ஏற்பட வாய்ப்பிருப்பதால், கவனத்தோடு செயல்பட வேண்டும். உறவினர்கள், அண்டை வீட்டாருடன் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும்.
மேலும், நட்பு பகையாக மாறக்கூடிய காலக்கட்டம் என்பதால் நண்பர்களுடன் விளையாட்டான பேச்சை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு நிலம், வீடு இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த மாதத்தில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய நினைப்பவர்களுக்கு இது அற்புதமான மாதம். மேலும், வெளிநாட்டில் ஏற்கனவே பணிபுரிந்துக்கொண்டிருப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
இருப்பினும், சுக்கிர பகவான் உங்க ராசியில் அமர்ந்திருப்பதால் மனமகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக மனதை போட்டு வாட்டிக்கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கவலையும் இன்பமும் கலந்த ஒரு காலக்கட்டம். சிலருக்கு முயற்சிக்கு ஏற்ற பரிசு காத்திருக்கிறது. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
புதிய வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. சில காரியங்களில் தடை, தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி அடைவீர்கள். சுக ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால், சிலருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. அதேபோல், தானாகவே சென்று மற்றவர்களுக்கு அட்வைஸ் கொடுப்பதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3, 5
சந்திராஷ்டம நாள்: 10, 11
பரிகாரம்: தினசரி பைரவர் வழிபாடு செய்து வருவது வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை தகர்த்து இன்பங்களை கொடுக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…