பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: விருச்சிகம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் விருச்சிகம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில், விருச்சிக ராசியைப் பொறுத்த வரை ஐந்தாம் இடத்தில் குரு, அர்த்தாஷ்டம சனி போன்றவை இருப்பதால், பெரிதளவிலான பாதிப்பு எதுவும் இல்லாமல் அமைய உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. இது பொருளாதாரத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கூடுதல் பொறுப்புகளைக் கையாளும் நேரம் வரும் போது, அது உங்களுக்குக் கஷ்டங்களைத் தரலாம். இதனால், வேலையை மாற்ற வேண்டிய எண்ணம் தோன்றும். ஆனால், இந்த சூழ்நிலைக்கு இந்த வேலைமாற்றம் தேவையில்லை. வேலை மாற்றம் பெற்றாலும், மீண்டும் அதே நிலை தான் தோன்றும். அதன் படி பொருளாதாரத்தில் அதிக சலுகைகளைப் பெற முடியும். ஆனால் வேலையைப் பொறுத்த வரை சற்று கூடுதல் சுமை காணப்படும்.
திருமண முயற்சி மிகச் சிறப்பாக உள்ளது. இந்த பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இது உறவுகளுக்கிடையே உள்ள வலுவை அதிகப்படுத்தும். ஐந்தாம் இடத்தில் உள்ள குரு, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுவதுடன், குழந்தை பாக்கியமும் பெறுவதற்கான வாய்ப்பையும் தருகிறது. இது நேர்மறையான பலன்களைத் தருகிறது.
கல்வியைப் பொறுத்த வரை, மாணவர்களுக்கு மிகச் சிறப்பான மாதமாகவே அமைகிறது. எந்தத் தடைகள் இருப்பினும், அது விலக்கப்பட்டு நல்ல பலன்களை அளிப்பதாக அமைகிறது. இது ஒரு சிலருக்கு நன்மையை அளிப்பதுடன், எதிர்பாராத பலன்களையும் அளிக்கிறது. உங்களது ஐடியாக்கள் மாறுவதற்கான சூழல் ஏற்படும். அர்த்தாஷ்டம சனி இருக்கும் இந்த சூழலில், கல்வியில் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
இல்லத்தரசிகளைப் பொறுத்த வரை, அதிகமான வேலை பளு காணப்படும். ஆனால், இந்த கால கட்டத்தில் புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டுதல் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பான காலமாக அமைகிறது. குழந்தைகள் வழியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். விருச்சிக ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, நிறைய நல்ல மாற்றங்களைத் தர உள்ளது. மன நிறைவான சூழலை உருவாக்குகிறது.
ஆரோக்கியத்தில் எந்த வித பாதிப்பையும் தராத நிலையைத் தான் தற்போது ராகு, கேது, குரு சஞ்சாரங்கள் தருகின்றன. ஆனால், சனி பகவான் சற்று கடுமையான சூழலை உருவாக்கிக் கொடுத்தாலும், அது உங்களுடைய உடல்நலத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவதாகவே அமையும். இது போன்ற சூழலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வயதில் மூத்தவர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 3, 9
சந்திராஷ்டம நாள்: 2, 3
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனி பகவானை வேண்டி, விளக்கேற்றி வருதல் நன்மைகளைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…