மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
கடந்த மாதம் வரையிலேயே தனுசு ராசியினருக்கு ஏழரை சனி இருந்த காரணத்தினால், அனைத்து காரியங்களும், இழுபறியையும், கஷ்டங்களையும் தருபவையாகவே அமைந்தது. இந்த மாசி மாதத்தை பொறுத்த வரை சனி பகவான் விலகி விட்டார். இதனால், இதுவரை இழுபறியான விஷயங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி உண்டாகும். புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வாழ்வில் சிறந்த நிலையினை அடையக் கூடிய காலமாக அமையும். மனதில் இன்பம் பெருகி மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள். இருப்பினும், எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. முதலீடு செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்ய வேண்டும்.
மனதில் இருந்த குழப்பங்கள், தோல்வி மனப்பான்மை உள்ளிட்ட அனைத்தும் விலகி நன்மையைப் பெறக் கூடிய சிறந்த ஒரு மாதமாக உள்ளது. தொல்லைகள், தடைகள் அனைத்தும் விலகி நன்மை உண்டாகும். ராசி அதிபதியான குரு பகவானும், சுக்கிர பகவானும் நல்ல ஒரு மாற்றத்தை பெறப் போகிறார்கள். உங்களுடைய வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெற்று பல மடங்கு லாபத்தை ஈட்டும் காலமாக அமைகிறது. இந்த மாதத்தில் வேலை செய்யும் நபர்கள் நிறுவனத்தை மாற்றும் முயற்சியில் இருப்பின், அதனை நிறைவேற்றலாம். இது உங்களுக்கு சிறப்பான மாற்றத்தை தருவதாக அமைகிறது. பொருளாதாரத்தை பொறுத்த வரை நல்ல லாபத்தை ஈட்டும் மாதமாக அமைகிறது. நெருங்கிய சகோதர, சகோதரர்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது.
படிப்பு சார்ந்த விஷயங்களில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான பலன்களைத் தரும். பணியில் உங்களுக்கு நிறைவு இல்லாத போதிலும், அதிக அளவிலான ஈடுபாட்டுடன் செய்வீர்கள். இது இப்போது உங்களுக்குப் பலனளிக்கா விட்டாலும், பிற்காலத்தில் நல்ல பலன்களைத் தரக்கூடியதாகவே அமைகிறது. திடீர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். அந்நியர்களின் உதவி சிறப்பாக உள்ளது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் ஒரு பக்கம் நன்மையும், மறுபக்கம் அவர்களால் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அப்பாவின் ஆதரவு பரிபூரணமாகக் கிடைக்கப் போகும் மாதமாக அமைகிறது.
இந்த மாதம், வீடு கட்டுவதற்கான அல்லது புதிய வீடு வாங்குவதற்கான காலமாக அமைகிறது. எந்த காரியத்திலும் எச்சரிக்கையுடன், கவனத்துடனும் செயல்படுவது நல்லது. புதிய பணியாட்களைச் சேர்க்க வேண்டிய காலமாக அமையும். அதே சமயம், பணியாட்களால் தொந்தரவுகள் பெறும் காலமாகவும் உள்ளது. செவ்வாய் பகவான் இருக்கும் ஸ்தானத்தினால், இந்த மாதத்தில் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளைக் கவனிப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் ஈட்டுவதற்கான காலமாக அமையும்.
வணங்க வேண்டிய தெய்வம்: தட்சணா மூர்த்தி
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
சந்திராஷ்டம நாள்: மாசி 19 ஆம் தேதி காலை 11.13 மணி முதல் மாசி 21 ஆம் தேதி இரவு 10.54 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…