பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் மீனம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ஏழரை சனியின் ஆரம்பம், விரைய சனி காலக்கட்டம் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு ஒரு அனுபவம் நிறைந்த மாதமாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் சுய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவனால் வாக்குவாதம் அதிகம் ஏற்படும். தேவையில்லாத பேச்சு அதிகமாகவே இருக்கும். நிம்மதியின்மை நிறைந்த மாதமாக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். சிலருக்கு அரசாங்கத்தினால் பிரச்சனைகள் வரும்.
இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சில தடை, தாமதம் ஏற்படும். அதேபோல், இந்த மாதத்தில் வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டும்.
உங்க ராசிக்கு 8வது வீட்டில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாலினத்தவரால் அவப்பெயர், பிரச்சனைகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் நிதானம் ரொம்பவே முக்கியம். கூர்மையான ஆயுதங்களை கையாளும்போதும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இருப்பினும், 10 வது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்வதால் தொழில் அமோகமாக இருக்கும். சுமாராக இருந்த வியாபாரமும் சூடுபிடிக்கும். தொழில் ரீதியாக மாற்றம், முன்னேற்றம் ஏற்படும்.
இந்த காலக்கட்டத்தில் எந்தவொரு விஷயத்திற்கும் கடினமாக முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் உண்டு. சமூகத்தில் செல்வாக்கு, மதிப்பு அதிகரிக்கும். மேலும், இந்த காலக்கட்டத்தில் கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 3, 5
சந்திராஷ்டம நாள்: 12, 13
பரிகாரம்: தினசரி முருகப் பெருமான் வழிபாடு செய்து வருவது நன்மையை அளிக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…