இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவரான ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய இவர் குளோபல் சர்வீஸ் பிரிவைக் கவனித்து வந்தார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
மேலும், இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் இயங்கும் அனைத்து சேவைகள், டிஜிட்டல் மாற்றம், பாரம்பரிய தொழில்நுட்பம், கிளவுட், உள்ளிட்ட சேவைகளையும் கவனித்து வந்தார். இவரது ராஜினாமா குறித்து, பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது, இவரது ராஜினாமாவினால் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு என நிறுவனத்தின் இயக்குநர் குழு தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இவரது அனுபவம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகும். இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பே, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அதாவது அக்டோபர் 13 ஆம் நாள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு வெளியிடப்படுகிறது. இந்த தினத்திலேயே, இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நிலவரப்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.65% குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், 1,423.90 ரூபாய்க்கு வர்த்தகத்தில் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…