நம் எதிர்காலத் தேவைக்காக நிகழ்காலத்தில் நாம் சம்பாதிக்கும் தொகையை சேமித்து வைப்பது மிக அவசியமாகும். அந்த வகையில் ஏராளமான முதலீடுகள் உள்ளன. நாம் பணத்தைச் சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முதலீட்டில் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் தரக் கூடிய வருமானம் என்பது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். அதன் படி, ஐந்து ஆண்டுகளில் எவ்வாறு 14 லட்சம் ரூபாயைப் பெறலாம் மற்றும் இதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் காண்போம்.
தற்போது, வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு, சம்பாதித்த பணத்தை உடனே செலவு செய்வதைக் காட்டிலும் அதனை எதிர்காலப் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும். அந்த வகையில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில், முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் எனும் போதும், அதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே, சேமிக்கும் பணத்தை பாதுகாப்புடன் சேமிப்பது மிக அவசியமானதாகும்.
அந்த வகையில், ஃபிக்ஸ்டு டெபாசிட், அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. நாம் செய்யக் கூடிய முதலீட்டிற்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் தரக் கூடிய திட்டமாகவும், பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் அமைவது அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள். இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் மூலம், நம்முடைய வாழ்க்கையைப் பலனுள்ளதாக மாற்றலாம்.
அதிலும், ஃபிக்ஸ்டு டெபாசிட்டை விட, கூடுதல் வட்டி தரக் கூடியவையாக அமைவது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாகும். இந்த திட்டத்தின் சேமிப்புக் காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தில், நீங்கள் செய்த முதலீடுகளுக்கு ஏற்ப பெரும் தொகை கிடைக்கும்.
அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், இந்த தேசிய சேமிப்புத் திட்டம் கிடைக்கப் பெறுகிறது. இதற்கான வட்டி விகிதம் 6.8% ஆகும். இத்துடன், வருடாந்திர கூட்டு வட்டியும் கிடைக்கும். அதே சமயம், திட்டத்தின் சேர்ந்து பயன்பெறுபவர்கள், முதிர்வு காலத்திற்குப் பிறகு தான் உங்கள் பணத்தைப் பெற முடியும்.
உதாரணமாக, இந்த திட்டத்தில் சேர்ந்து ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டு கால முடிவில் உங்களுக்கு ரூ.14 லட்சம் கிடைக்கும். அதே போல, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டு கால இறுதியில் ரூ.6.94 லட்சம் கிடைக்கும். அதாவது, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள் சேமித்த தொகை ஐந்தே ஆண்டுகளில் ஒன்றரை மடங்காக திரும்பக் கிடைக்கும். மேலும், இது எந்த விதத்திலும் ஆபத்து இல்லை என்பது பயனர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.
அஞ்சல் சேமிப்புத் திட்டத்தில் இயங்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பங்குபெற சில வரையறைகள் உள்ளன.
அதன் படி, 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும், இந்தத் திட்டத்தில் இணையலாம்.
இதுவே, திட்டத்தின் பயனர்கள் மைனராக இருப்பின், அவரது பெற்ரோர் அல்லது வாரிசு தாரர்களின் பெயரில் சான்றிதழ் வழங்கப்படும்.
திட்டத்தில் சேர்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆகும்.
அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
அதே சமயம், முதலீட்டின் மதிப்பு கட்டாயம் 100 ஆல் பெருக்கக் கூடியதாக அமைய வேண்டும்.
திட்டத்தின் முதிர்வுக் காலத்திற்கு முன்னரே, பயனர்கள் தங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியாது. இதுவே, அவர்களது சூழ்நிலையைக் கருதி பணம் பெற நினைப்பவர்களுக்கு சில விதி விலக்குகள் உண்டு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…