பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறதோ அதே போல, ஆண் குழந்தைகளுக்கு சிறப்பான சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. பெண் குழந்தையாக இருந்தாலும், ஆன் குழந்தையாக இருந்தாலும் சேமிப்பு என்பது இருவருக்குமே அவசியமாகிறது. இதனை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கூறலாம். குழந்தைகளின் எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குழந்தைகளின் சிறுவயது முதலே சேமிப்பு செய்து வருவது அவசியம் ஆகும்.
பொன்மகன் சேமிப்புத் திட்டம்
மத்திய அரசு ஆண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டு செயல்படுத்தி வருவதே பொன்மகன் சேமிப்புத் திட்டம் ஆகும். இது இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொன்மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஆண்குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். குறைந்தபட்சம் ரூ.500 முதல் லட்சக் கணக்கில் இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும்.
திட்டத்தின் விவரங்கள்
இந்த திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் அவர்களது மகனின் பெயரில் மொத்தம் 15 ஆண்டுகளுக்குப் பணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் 8.1% வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி, ஆண் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது. எந்தவொரு பெற்றோர் தங்களது மகனிற்காக சேமிக்க விரும்புகிறார்களோ அவர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கலாம்.
எப்படி இணைவது?
➤ மத்திய அரசு வழங்கும் இந்த பொன்மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் சேமிக்கலாம். அதன் படி, முதலில் தபால் நிலையங்களில் கணக்கு திறக்க வேண்டும்.
➤ நீங்கள் தற்காலிகமாக இருக்கும் இடத்தில் தபால் கணக்கை திறந்த பிறகு, வேறு இடத்திற்கு சென்றால் டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும். இத்திட்டத்தில், ஒருவர் தமிழகம் முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.
➤ குழந்தையின் வயது 10 வயதிற்கு மேல் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரிலேயே சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இதுவே, 10 வயதிற்குக் குறைவாக இருப்பின் பெற்றோர்கள் இணைப்பு கணக்கைத் (Joint Account) தொடங்க வேண்டும்.
பொன்மகன் சேமிப்புத் திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்கள்
➤ குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
➤ பெற்றோர் முகவரி
➤ ஆதார் அட்டை
➤ பான் கார்டு
➤ குழந்தையின் புகைப்படம்
திட்டத்திற்கான வட்டி விகிதம்
குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 8.1% என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறிக் கொண்டே இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, வட்டி விகித மாற்றத்தை தபால் நிலையத்தில் அல்லது இந்தியா போஸ்ட் வெப்சைட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், குழந்தைகளுக்காக கணக்கு தொடங்கியதிலிருந்து 7 ஆவது ஆண்டில் 50% தொகையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. இதனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த பின், கணக்கை மூடி விடலாம்.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன் கூட்டியே பணம் வேண்டுமெனில்
இதுவே, ஒருவர் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணத்தை முன் கூட்டியே எடுக்க விரும்புகிறார் எனில், அவர்கள் பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கு, பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கு என்ன காரணம் என்று கூற வேண்டும். இந்த திட்டத்தில், சேரும் நபர்கள் செலுத்தப்படும் தொகைக்கு 80சி பிரிவில், வருமான வரி விலக்கு கிடைக்கிறது. இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…