Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Baakiyalakshmi Today Episode Tamil: பாக்கியா பக்கம் நிற்கும் குடும்பம்...முதல் நாளே தனி மரமாய் நிற்கும் கோபி!

Priyanka Hochumin October 08, 2022 & 13:00 [IST]
Baakiyalakshmi Today Episode Tamil: பாக்கியா பக்கம் நிற்கும் குடும்பம்...முதல் நாளே தனி மரமாய் நிற்கும் கோபி!Representative Image.

Baakiyalakshmi Today Episode Tamil: நேத்து கல்யாணம் நடந்துச்சு, ஆனா இன்னைக்கே தனி மரமா ஆகிட்டாரு நம்ப கோபி. நம்ப வடிவேல் சொல்ற மாறி, " இது என்ன பிரமாதம் இத விட ஸ்பெஷல் ஐட்டம் இன்னும் இருக்கு" என்பது போல இனிமே தான் அவருக்கு இருக்கு. இன்னைக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்ப்போம்.

நீ நல்லாவே இருக்க மாட்ட டா...சாபத்தோட நடந்த...கோபி ராதிகா கல்யாணம்! அதிரடியான திருப்பங்களுடன்!

Baakiyalakshmi Today Episode Tamil: பாக்கியா பக்கம் நிற்கும் குடும்பம்...முதல் நாளே தனி மரமாய் நிற்கும் கோபி!Representative Image

சோகத்தில் மொத்த குடும்பமும்....

மனசு நொந்து போய் வீட்டுக்கு போறாங்க இனியா, ஈஸ்வரி அப்புறம் ராமமூர்த்தி. அங்க போய் செழியன் கிட்ட நடந்தது சொல்லி அழுகிறா இனியா. அத கேட்டதும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறான் செழியன். என்ன சொல்றதுன்னு தெரியாம குடும்பமே அழுதுட்டு இருக்கு. அங்க பாக்கியா வேலையெல்லாம் முடிசிட்டு சம்பளத்தை வாங்கிட்டு வீட்டுக்கு வராங்க.

அவங்க வீட்டுக்கு வந்த உடனே செழியன் பாக்கியா கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அழுகுறான். நீ தாமா அவர சரியா புரிஞ்சி வச்சிருக்க. அவரு அப்படி ஒரு தப்பு பண்ணியும் அவரு பக்கம் நாங்க நின்னது தான் பெரிய தப்பு. நீ எப்படி மா அதையெல்லம் தங்கிட்டு அங்க வேலை செஞ்ச. அவரு போனா போகட்டும் மா நா பாத்துக்குறேன் இந்த குடும்பத்தை என்று மூத்த மகன் மாறி அழுதுகிட்டே பேசுறான். வீட்ல எல்லாரும் ஒடஞ்சி போய் உக்காந்துட்டு இருக்காங்க.

Baakiyalakshmi Today Episode Tamil: பாக்கியா பக்கம் நிற்கும் குடும்பம்...முதல் நாளே தனி மரமாய் நிற்கும் கோபி!Representative Image

பாக்கியாவை அரவணைக்கும் பிள்ளைகள்!

அப்புறம் ரொம்ப நேரம் கழிச்சு எழில் வீட்டுக்கு வந்து எப்பையும் போல பேசிட்டு மேல போறான். அங்க அப்புறம் அழுதுட்டு இருக்கும் இனியா செழியன் கிட்ட என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கிறான். உடனே அழுது கிட்டு அப்படியே கீழ போயி பாக்கியாவ கட்டி பிடிச்சு ஆறுதல் சொல்றான். அப்படியே பாட்டி ஈஸ்வரி கிட்ட போய் நாங்க இருக்கோம் பாட்டி இனிமே இந்த குடும்பத்த நாங்க பாத்துக்குறோம்னு ஆறுதல் சொல்றாங்க. இப்படி கோபி ஒருத்தன் செஞ்ச தப்புனால ஒட்டு மொத்த குடும்பமே அழுதுட்டு இருக்கு. ஆனா இதையெல்லாம் பண்ண கோபியோட நிலம எப்படி இருக்கு தெரியுமா?

Baakiyalakshmi Today Episode Tamil: பாக்கியா பக்கம் நிற்கும் குடும்பம்...முதல் நாளே தனி மரமாய் நிற்கும் கோபி!Representative Image

தனி மரமாய் நிக்கும் கோபி...

கல்யாணம் முடிஞ்சா கையோட ராதிகா வீட்டுக்கு போறாங்க அவங்க குடும்பம். புது பையன் பொண்ணு கோலத்துல ரெண்டு பேரும் நிக்கிறத பாத்துட்டு அக்கம் பக்கத்துல இருக்குறவங்க காத்து பட பேசுறாங்க. ஆனா இது எதுமே இல்லாத மாறி அவங்கள ஆரத்தி எடுத்து உள்ள கூட்டிட்டு போறாங்க. யாரோட முகத்திலையும் எந்த சந்தோசமே இல்ல. அப்புறம் கடுப்புல ஆளுக்கு ஒரு பக்கம் போய்டாங்க கோபி மட்டும் தனியா உக்காந்துட்டு இருக்காரு. கல்யாணம் ஆன அன்னைக்கே இந்த நிலம இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா எப்படி இருப்பாரோ தெரில.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்