Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பிறகு தனுஷ் என்னிடம் சொன்ன வார்த்தை இதுதான்.. மனம் திறந்த செல்வராகவன்..

Nandhinipriya Ganeshan Updated:
சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பிறகு தனுஷ் என்னிடம் சொன்ன வார்த்தை இதுதான்.. மனம் திறந்த செல்வராகவன்..Representative Image.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குநர்களின் ஒருவர் செல்வராகவன். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அடியெடித்து வைத்தார். இவர்கள் கூட்டணியில் வந்த இரண்டாவது 'காதல் கொண்டேன்'. இந்த தனுஷ், செல்வராகவன் இரண்டு பேருக்குமே பெரிய வாய்ப்பாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த படத்தில் தான் சோனியா அகர்வால் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பிறகு தனுஷ் என்னிடம் சொன்ன வார்த்தை இதுதான்.. மனம் திறந்த செல்வராகவன்..Representative Image

பின்னர், செல்வராகவன் இயக்கிய அனைத்து படங்களுமே செம ஹிட் அடித்தது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்திருந்தார். இதனால், இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து, 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக 2010 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து செய்துக் கொண்டனர். 

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பிறகு தனுஷ் என்னிடம் சொன்ன வார்த்தை இதுதான்.. மனம் திறந்த செல்வராகவன்..Representative Image

விவாகரத்தான சில வருடங்களிலேயே செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகளும் இருக்கிறது. ஆனால், செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால் தற்போது வரை தனியாக தான் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பிறகு தனுஷ் என்னிடம் சொன்ன வார்த்தை இதுதான்.. மனம் திறந்த செல்வராகவன்..Representative Image

இந்த நிலையில், செல்வராகவன் நடித்து வெளியான பகாசூரன் பட ரிலீஸின் போது ஒரு பேட்டியில், சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஏற்பட்ட போது, அவரது தம்பியான தனுஷ் கூறியது பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதாவது, 'எனக்கும் சோனியா அகர்வாலுக்கும் விவாகரத்தான சமயத்தில் தனுஷ் என்னிடம் வந்து, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டாம். கடவுள் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் இப்படி சிங்கிளாகவே இருந்து விடு' என்று கூறினார். 

ஆனால், கீதாஞ்சலி எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அதாவது உண்மையாக ஒருவரை காதலித்தால் கண்டிப்பாக நல்லதே நடிக்கும். அதுதான் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தது என்று கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்