Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இவங்க பண்றதெல்லாம் பாத்தா பிரிஞ்சி போற மாறியே தெரிலையே | Eeramana Rojave 2 Today Episode

Priyanka Hochumin Updated:
இவங்க பண்றதெல்லாம் பாத்தா பிரிஞ்சி போற மாறியே தெரிலையே | Eeramana Rojave 2 Today Episode Representative Image.

ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகம் ஒவ்வொரு வாரமும் புது புது கதை நுணுக்கத்துடன் நம்மை கொண்டு செல்கிறது. ஜீவா, பிரியா மற்றும் பார்த்திபன், காவ்யா ஜோடிகள் இப்போது ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் அதனை கெடுக்கும் வண்ணம் பார்த்தியின் தாயார் காவ்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற பல வேலைகளை செய்து வருகிறார். இதுவரை நடந்த கதை என்ன என்று உங்களுக்கு தெரியும். இந்த வாரத்தில் குறிப்பாக இன்றைக்கு என்ன கதை என்று பாப்போம்.

இவங்க பண்றதெல்லாம் பாத்தா பிரிஞ்சி போற மாறியே தெரிலையே | Eeramana Rojave 2 Today Episode Representative Image

பார்த்திபன் ஒரு முக்கியமான பிசினஸ் விஷயமாக வெளியூர் செல்கிறான். காவ்யாவோ எப்படி பார்த்திபனிடம் இருந்து விலகலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார். எனவே, பார்த்தியை விட்டு பிரிவதற்கு முன்பு அவருக்கு எல்லா சந்தோஷங்களையும் தர விரும்புகிறாள் காவ்யா. யாருக்கும் தெரியாமல் பார்த்தியுடன் இருக்க காவ்யா கிளம்புகிறாள். அங்கையோ பார்த்தி எந்த நேரமும் காவ்யா நினைப்பாகவே இருக்கிறான்.

இவங்க பண்றதெல்லாம் பாத்தா பிரிஞ்சி போற மாறியே தெரிலையே | Eeramana Rojave 2 Today Episode Representative Image

அவனுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் காவ்யா நேரில் வந்து நின்றதை பார்த்த உடன் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து மகிழ்ச்சியடைகிறான் பார்த்திபன். அங்கு அவர்கள் இருவரும் விரும்புவது போல நேரத்தை அனுபவிக்கின்றனர். பார்த்தி காவ்யாவை கூட்டிக் கொண்டு வெளியில் செல்லும் போது இருவரின் சின்ன சின்ன சண்டைகளை பார்வையாளர்களாகிய நாம் பார்த்து ரசிக்கலாம். பார்த்திபன் ஆசைப் படும் எல்லா விஷயங்களையும் செய்து தருகிறாள் காவ்யா. இவர்கள் ஆனந்தமாக இருக்கையில் கரடி போல பார்வதி பார்த்திக்கு வீடியோ கால் செய்து செக் செய்கிறார்.

இவங்க பண்றதெல்லாம் பாத்தா பிரிஞ்சி போற மாறியே தெரிலையே | Eeramana Rojave 2 Today Episode Representative Image

எப்படியோ அவரிடம் இருந்து தப்பித்து மீண்டும் கொஞ்சி குலாவ ஆரம்பிக்கின்றனர். எந்த ஒரு செயலை செய்யும் போதும் இருவரும் குழந்தைகள் போல போட்டியிட்டுக் கொண்டு செய்வது நம்மை அறியாமல் சிரிக்க வைக்கிறது. இவை எல்லாம் முடிந்த உடன் காவ்யா பார்த்தியை விட்டு எப்படி பிரிய போகிறார். அதற்கு பார்த்திபன் எந்த மாறிய ரியாக்ட் செய்யப் போகிறார் என்பதை அடுத்த எபிசொடில் தெரிந்துகொள்வோம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்