எனக்கும் 40% ஷேர் இருக்கு ஒழுங்கா இருங்கன்னு அப்பத்தா தன்னோட கேம்ம ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. மலை மாறி இருந்த குணசேகரனை இப்படி புலம்ப விட்டுட்டாங்கன்னு குடும்பத்துல எல்லாரும் கவலைல இருக்காங்க. இதுல நடுல ஜனனி பிரெண்ட் வாசு வந்து வீட்ல நல்லா கலாட்டா பண்றாங்க. அப்புறம் ஜனனி பேசி வாசுவ அனுப்பிவைக்கிறாங்க. இப்ப அப்பத்தா கிட்ட இருக்குற அந்த 40% ஷேர எப்படி வாங்குறதுன்னு பிளான் பண்ணிட்டு இருக்காங்க அம்மாவும் தம்பிகளும்.
உடனே என்ன பண்றாங்கன்னா சம்மந்தி குடும்பத்துல இருக்குற எல்லாத்தையும் கூப்பிட்டு பேசுறாங்க. நீங்க வந்து கொஞ்சம் பக்குவமா அப்பத்தா கிட்ட பேசி சமரசமா முடிச்சு குடுங்கன்னு கேக்குறாங்க. அவங்களும் வேற வழி இல்லாம ஒதுக்குறாங்க. அடுத்த நாள் கிட்சன்ல மருமகள் மூனு பேரும் உட்காந்து புறணி பேசிட்டு இருக்காங்க. கல்யாண ஆன புதுசுல வீட்டுக்கு வந்த சம்மந்தி குடும்பத்த மரியாதை இல்லாம நடத்தி வீட்டு பக்கமே வர கூடாதுன்னு தொறத்திட்டு இப்ப வெக்கமே இல்லாம சொத்துக்காக கூப்பிட்டு சாப்பாடு போடறாங்களே இவங்கெல்லாம் என்ன மனுஷனுங்கனு தெரிலன்னு பேசிட்டு இருக்காங்க.
சம்மந்தி வீட்ல எல்லாரும் வந்த உடனே குணசேகரன் விழுந்து விழுந்து கவனிக்கிறாரு. ஆனா அவங்க யாருக்கும் சந்தோசம் இல்ல, போட்ட சாப்பாடும் தொண்டைல இரங்கல. நல்லா சாப்புட வச்சிட்டு மொத்த குடும்பமும் மடில பஞ்சாயத்து வைக்கிறாங்க. அப்பத்தா வந்த உடனே இவங்க பேசலாம்னு ஆரம்பிக்கிறாங்க. அதுக்கு முன்னாடியே அவங்க என்ன சொல்ல வராங்கனு அப்பத்தா வரிசையா சொல்லிடறாங்க. எல்லாம் மெரண்டு போய் உட்காந்துட்டு இருக்கு.
அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாம உடனே செண்டிமெண்ட்ட கைல எடுக்குறாங்க. நம்ப குணசேகரன் எவ்ளோ கஷ்டப்பட்டாருன்னு சொல்ல ஆரம்பிக்கிறாங்க. உடனே நம்ப ஆளு அவரோட நடிப்ப ஆரம்பிக்கிறாரு. தம்பிகள் எல்லாரும் ரொம்ப பீலிங்ல இருக்கும் போது நம்ப அப்பத்தா நல்லா கலாக்கிறாங்க. இப்ப இவங்க சமரச பேச்சுக்கு அப்பத்தா ஒதுக்குவாங்களா இல்ல இவங்களுக்கு நோஸ் கட் குடுப்பாங்களான்னு வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…