Pandian Stores Today Episode: எப்படியோ ஒருவழியா குடும்பம் ஒன்னு சேந்துட்டாங்கப்பா. போட்டிக்கு போன இடத்துல கதிர்க்கு பிரச்சனை ஏற்படுத்து. முல்லை ஜீவாக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, மூர்த்தியும் ஜீவாயும் அங்க வந்து கதிரை காப்பாத்துறாங்க.
அப்புறம் அந்த போட்டில ஜெயிச்சு பரிசு தொகை 10 லட்சத்தை வாங்கிட்டு கெளம்புறாங்க. கதிர்க்கு சந்தோசம் தாங்கல மூர்த்தி அண்ணன் அவன் கிட்ட வந்து பேசிட்டாருன்னு. அங்க மதுரைல இருந்து வீட்டுக்கு போற வரைக்கும் கதிர் கண் கலங்கிய இருந்துச்சு. கதிர் முல்லைய வீட்ல விட்டுட்டு அங்க இருந்து கிளம்ப மனசு வராம ஒருத்தருக்கு ஒருத்தர் கூப்பிடுங்க, கதிர வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு சொல்லுங்க அண்ணே எல்லாம் மனசுக்குள்ளையே பேசிட்டு இருக்காங்க.
ஆனா மனசு கேக்காம மூர்த்தி வந்து எல்லாம் ஒண்ணா இருந்தா தான் அது வீடு. நீங்க அங்க இருந்து வெளிய போனதுல இருந்து வீடு வீடவே இல்லடா. நீங்க தனியா இருந்ததெல்லாம் போதும் வாங்க நம்ப வீட்டுக்கு போலாம்னு கூப்பிட்றாங்க. உடனே முலையோட அம்மா வந்து அதெல்லாம் அனுப்ப முடியாது. உறவு முறிஞ்சது முறிஞ்சது தான்னு சட்டம் பேச வந்துட்டாங்க. ஆனா அவங்களுக்கு நோஸ் கட் குடுக்குற மாறி முல்லை, நம்ப வீட்டுக்கு வர்றத விட வேற என்ன சந்தோசம் எங்களுக்கு இருக்க போகுதுன்னு சொல்லிட்டு கெளம்புறாங்க.
ஜீவா மொதல்ல வீட்டுக்கு போன உடனே தனம் மீனா எல்லாரும் பதறி போயி அவங்க எப்படி இருக்காங்க ஒன்னும் இல்லையேனு கேக்குறாங்க. அப்புறம் வெளிய கூட்டிட்டு போயி காமிச்ச உடனே எல்லாரும் ரொம்ப சந்தோசப்பட்டு அழுது சிரிச்சு உள்ள போறாங்க. இனிமே என்ன ஆனாலும் சரி வீட்ட விட்டு மட்டும் போகாத எங்களால தாங்க முடிலனு அழுகுறாங்க. அப்புறம் கதிர் போட்டில ஜெயிச்ச 10 லட்சம் பணத்தை அண்ணி கிட்ட குடுக்குறான். அதை பாத்து எல்லாரும் செம்ம ஷாக் ஆகுறாங்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…