தன்னுடைய புருஷனுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோங்கிற பதட்டத்துல அழுதுகிட்டே ஊருக்கு போறாங்க கார்த்தி அம்மா, சுந்தரி, கிருஷ்ணா. அங்க தன்னோட பொண்ணு சொன்ன விஷயத்தையெல்லாம் கேட்டு மனசு ஒடஞ்சு போய் இருக்காரு கார்த்தி அப்பா. ஆனா கார்த்தி தான் தப்பிக்கணும்னு தன்னுடைய குடும்பத்துல இருக்குறவங்களையே தப்பு தப்பா பேசிட்டு இருக்கான்.
தன்னுடைய அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு போனதை கேட்டு பதறி போயி வீட்டுக்கு போறான் கார்த்தி. அங்க அவனுடைய அக்கா நடந்ததை சொல்றாங்க. சுந்தரி சொன்ன யோசனைல தான் நான் அப்பா கிட்ட எல்லா உண்மையையும் சொன்னேன். அம்மாவ இங்க இருந்து அனுப்ப வேற வழி தெரில. அதான் அப்பா கிட்ட சொல்ல வேண்டியதா போச்சு. அப்பாக்கு இப்ப இருக்குற கோவத்துக்கு நீ மட்டும் அங்க போன உன்னைய வெட்டி போட்ருவாங்கன்னு அலெர்ட் பண்றாங்க.
இதை கேட்டதும் நம்ப ஆளுக்கு அவருடைய எதிர்காலம் பிரகாசமா தெரியுது. எல்லாத்துக்கும் விஷயம் தெரிஞ்சி போச்சு, இனி அடுத்து மாமாக்கும் தெரிஞ்சிதுன்னா என்னுடைய நிலைமை என்னவாகும்னு சொல்லிட்டு அணு வீட்டுக்கு வரான். இங்க வந்து ஏன் ஊருக்கு போல, வா நம்ப கெளம்பலாம்னு அனு சொல்றாள். இல்ல அவங்க உன்னைய விட்டுட்டு வந்தா தான் வீட்ல ஏத்துப்பாங்களாம். இதை கேட்டதும் அனு அழுது அழுதுகிட்டே கார்த்தி வீட்ல இருக்குறவங்கள திட்டுகிறாள். அதை பொறுத்துக்க முடியாம கார்த்தி அனுவை திட்டிட்டு போறான். அனு அம்மா கார்த்தி சொல்ற எல்லா பொய்னு தெரிஞ்சும் எதும் சொல்ல முடியாம மொறச்சிகிட்டே நிக்கிறாங்க.
கார்த்தி அம்மா, சுந்தரி கிருஷ்ணா எல்லாரும் ஊருக்கு போயி அந்த பொய்ய அப்படியே மெயின்டெயின் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாம் உண்மை தெரிஞ்சும் யாரும் எங்களுக்கு தெரியும்னு சொல்லாம என்னமா ஆக்ட் பண்றாங்க தெரியுமா. அப்பையும் கார்த்தி அம்மா கோவத்துல அப்ப அப்ப உண்மைய சொல்ல வராங்க, ஆனா சுந்தரி அதை சொல்ல விட மாட்டேங்கிறா. எப்ப தான் எல்லாத்துக்கும் உண்மை தெரியுமோ பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…