Thendral Vanthu Ennai Thodum Today Episode: மருமகன் என்ற அந்தஸ்தோட அபி வீட்டுக்கு போன வெற்றி இல்லாத அட்டூழியம் செஞ்சி, மாமானாரை இம்ப்ரெஸ் பண்ணுறாரு. அப்படி என்ன தான் பண்ணாரு, ஜட்ஜ் என்ன செஞ்சாருன்னு பாப்போம்.
சொந்த ஊரு கோவிலுக்கு குடும்பத்தோட போறதுக்காக அபியோட வீட்டுக்கு ரெண்டு பேரும் போறாங்க. அப்புறம் சாப்பிட உட்காந்த இடத்துல, செய்த அட்டகாசம் இருக்கே. வெற்றி அங்க போனதுல இருந்து சூர்யாவை மச்சான் மச்சான்னு கூப்பிட்டு வெறுப்பேத்திட்டு இருக்கான். அப்புறம் மகள் மருமகன் வந்திருக்குக்காங்கனு ஊடுறதுல இருந்து தாவுற வரைக்கும் எல்லாத்தையும் சமைச்சி வச்சிருக்காங்க. அதை பேசாம சாப்பிடலாம்ல, சூர்யாவை வெறுப்பேத்துறதுக்காக அபிக்கு ஊட்டி விட்றதென்ன ஒன்னும் தாங்க முடில.
எல்லாம் நல்லா சாப்பிட்டு முடிசிட்டு பொண்டாட்டி கையால வெத்தலை வாங்கி போட்டுட்டு, நான் கொஞ்சம் தூங்கிக்கவான்னு கேக்குறான் வெற்றி. ஆனா அதுக்கு ஒத்துக்களை சங்கரநாராயணன், உடனே வெற்றி ஜெய் ஜக்கம்மானு கத்த, அவரு பாவம் ரொம்பவே பயந்துட்டாரு. இந்த நேரம்னு பாத்து அபி அம்மா செக்கப் போயிடு வராத நால வெற்றி கொஞ்ச நேரம் தூங்க போறாரு. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு கீழ வரும் போது, அபி தம்பி தங்கச்சிக்கு ஒரு முக்கியமான சப்ஜெக்ட்ல டவுட் இருக்குறத பாதை வெற்றி நான் சொல்லி தரேன்னு சொல்றான்.
அதுக்கு சூர்யா வாத்தியாருக்கு நடத்த தெரியாதத இவன் சொல்லி தண்டுவானானு நக்கலா சொல்லறாரு. அதுனால சூர்யாக்கு நோஸ் கட் கொடுக்குற மாறி, வெற்றி செம்மையை சொல்லித்தறாரு. அதை பாத்து ஜட்ஜ் சங்கரநாராயணனே அசந்து போயிட்டாரு. உடனே அபி தன் புருஷனோட தற்பெருமைய எடுத்து விட, ஜட்ஜ் மட்டும் இல்ல சூர்யாவும் மெரண்டு போயிட்டாரு. சரி வீட்டுக்கு கெளம்பலாமானு ரெடி ஆகுறாங்க, ஆனா மழை விடல. இன்னைக்கும் சொந்த ஊருக்கு அவங்க கெளம்பல. பாக்கலாம் எப்ப கெளம்புவாங்கன்னு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…