நம்ப ஊரைப் பொறுத்த வரை குடும்பம் மற்றும் சொந்த பந்தங்களுடன் சகஜமாக பேசி சிறித்து சந்தோசமாக இருந்தால் தான் அவர்கள் நல்லவர்கள் என்ற முரண்பாடு இன்றும் உள்ளது. இதுவே ஒருவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் போது, மற்றவர்களுடன் அந்த அளவிற்கு நெருங்கி பழகமால் இருந்தால் அவர்களை சற்று ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள், என்ன யோசிக்கிறார்கள் போன்ற எந்த கேள்வியும் எழுப்ப மாட்டார்கள். இப்படி தன்னுடைய தனிமையை ரசிக்கும் நபர்களைத் தான் உள்முக சிந்தனையாளர் (Introvert) என்று அழைக்கப்படுவார்கள்.
உலகத்தில் இருக்கும் Introvert-கள் தங்களைப் பற்றிய சிந்தனையிலே ஆழ்ந்து இருப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் சமூகம், சோசியல் மீடியா ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பவர்கள். மேலும் கூச்சம் அதிகம் இருப்பவர்களாக இருப்பதால் சகஜமாக பழக்கத்தில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதை காட்டிலும், தன்னுடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள்.
இந்த சமூகத்தில் இப்படி Introvert characteristics ஆக இருப்பதால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இவர்கள் எந்த இடத்திற்கும் ஏற்ப எளிமையாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்களை நம்பி எந்த விஷயத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். அது நல்ல அல்லது சோகமான செய்தியாக இருந்தாலும் சரி. அவர்கள் உங்களை குறை கூறாமல், நீங்கள் தெளிவு அடையும் வரை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உண்மை நண்பர்கள்
Introvert in society ஆழந்த சிந்தனையாளர்கள். இவர்கள் ஒருவருடன் பழகுவதற்கு முன்னர் அவர்கள் நல்லவரா? இல்லையா? என்று உற்று கவனித்து தீர்மானம் செய்வார்கள். பின்பு அவருடன் நண்பராக பழக ஆரம்பித்தால் நீண்ட காலம் நீடிக்கும் அந்த நட்பு.
திருமண வாழ்வில் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு இரண்டு பேரில் ஒருவர் Introvert ஆக இருந்தால் நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமையும். தன்னுடைய துணைக்கு தர வேண்டிய மரியாதை, தனிமை பற்றி நன்கு அறிந்தவர்கள்.
இவர்கள் சாதாரணமாக ஒரு செயலை செய்வதற்கு முன்பு பல முறை யோசித்து தான் செயல்படுவார்கள். அந்த வகையில் மற்றவர்களால் தீர்வு காண முடியாத பிரச்சனைக்கு ஈஸியாக தீர்வு காண்பார்கள். ஏனெனில் பல கோணத்தில் சிந்தித்து எது சரியாக இருக்கும் என்று ஆழ்ந்து யோசித்து தீர்வு காண்பார்கள்.
நல்ல தலைவன்
இவர்கள் எடுத்தோம் கவுத்தோம் என்று செயல்பட மாட்டார்கள். Introvert-கள் முதலில் அமைதியாக ஆராய்ந்து, உற்று நோக்கும் பண்பு கொண்டவர்கள். அதனால் ஒரு நல்ல தலைவனாக இருக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். மேலும் சக மனிதர்களை மதிக்கும் குணம் இருப்பதால் இவர்களின் தலைமையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
சமூகத்தில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை இல்லாமல் தாங்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை தைரியமாக செய்வார்கள். இவர்கள் மற்றவர்களை விட தங்களை முன் வைப்பதால் தங்களுக்கான சுந்தந்திரத்தை அடைகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…