இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றோம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றும் கூட.
பொதுவாக, நமக்கு ஒருநாள் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதாக நினைக்கிறோம். ஆனால், கிறிஸ்துமஸ் 12 நாட்கள் கொண்டாப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?.
ஆம். கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் நாளில் கிறித்தவர்கள் அனைவரும் தேவாலயம் சென்று இயேசு கிறிஸ்துவை வழிபாடு செய்து ஒருவருக்கொருவர்கள் வாழ்த்தினை கூறி மகிழ்வார்கள்.
அதுமட்டுமல்லாமல், இந்த இனிய நாளில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் வழங்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
மேலும், வீட்டை அழங்கரிப்பதும், விருந்தினர்களை வரவேற்கும் விதமாக வீட்டின் வாசலிலும் வண்ண வண்ண கோலங்களிடுவதும் வழக்கம். இதோ உங்க வீட்டு வாசலை கிறிஸ்துமஸ் நாளன்று அலங்கரிக்க அழகிய கோலங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…