எல்லோருக்கும் ஆல் டைம் ஃபேவரட் என்ற லிஸ்டில் பிரியாணி இல்லாமல் இருக்காது. சைவப் பிரியர்களும், அசைவப் பிரியர்களும் விரும்பி உண்ணுவர். அதே போல முட்டை என்றாலும் அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய உணவுப் பொருளாகவே உள்ளது. அந்த வகையில், முட்டையை வைத்து முட்டை பிரியாணி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
முட்டை பிரியாணி செய்வதற்கு முன் அவித்த மசாலா முட்டையைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
✤ முட்டை – 3 அல்லது 4 (வேகவைத்து – 4 இடத்தில் கீறியது) எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ பின், ஒரு பாத்திரம் எடுத்து எண்ணெய் விட்டு சூடேற்ற வேண்டும். அதில்,
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன் போன்றவற்றை சேர்த்து, மிதமான சூட்டில் வைத்து வறுத்துக் கொள்ளவும். அதன் பின், அவித்த முட்டைகளை அதில் சேர்த்து கிளறிய பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
அண்ணாச்சி பூ – 1
கல்பாசி – சிறிதளவு
பிரியாணி இலை – 2
சோம்பு – 1 டீ ஸ்பூன்
வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கியது)
புதினா தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்
தக்காளி – 1
கல் உப்பு – தேவையான அளவு
தேவையான மசாலா பொருள்கள்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
அரிசி – பாஷ்மதி அரிசி (20 நிமிடங்கள் ஊற வைத்து) – 2 கப்
தயிர் – 2 டீஸ்பூன் (விருப்பம் இருந்தால் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.)
✤ முதலில், ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அதனைச் சூடேற்ற வேண்டும்.
✤ பிறகு எண்ணெய் தேவையான அளவு ஊற்றி சுட வைக்க வேண்டும்.
✤ எண்ணெய் கொதித்த பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சிப் பூ, கல்பாசி, பிரியாணி இலை, சோம்பு, வெங்காயம், புதினா இலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கல் உப்பு போன்ற அனைத்தையும் மேலேக் கொடுக்கப்பட்டவாறு எடுக்கப்பட்ட அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✤ பிறகு தக்காளி நன்கு மசிந்து வதங்கிய பிறகு மசாலா பொருள்களைச் சேர்த்து நன்கு கிளறி விடவும். இதனுடையே தயிர் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.
✤ அதன் பிறகு, அரிசி வேக தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனைத் தொடர்ந்து, ஊறவைத்த அரிசியை அவற்றுடன் சேர்க்கவும்.
✤ இப்போது முன் தயார் செய்து வைத்துள்ள அவித்த மசாலா முட்டை மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளவும். குக்கர் என்றால், 2 விசில் வந்த பிறகு கீழே இறக்கவும். பாத்திரம் என்றால் அரிசி முழுவதும் வேக வைத்து விடாமல், முக்கால்வாசி வெந்த உடனேயே பாத்திரத்தை இறக்கி ஒரு மூடியால் மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ அதன் பின், சில நிமிடங்கள் கழித்து மூடியை அகற்றி விட்டுப் பார்க்கும் போது அருமையான மணத்தில் முட்டை பிரியாணி தயாராக இருக்கும்.
இந்த சுவை மிகுந்த சூப்பரான டேஸ்டில் முட்டை பிரியாணியை நாம் இப்படியும் ஒரு முறை செய்து பார்க்கலாமே…! கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் இது போல சுவையான பிரியாணியைச் செய்து உண்டு மகிழலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…