Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Nandhinipriya Ganeshan September 14, 2022 & 19:20 [IST]
டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? Representative Image.

ஏடிஎஸ் எஜிப்டி என்னும் பெண் கொசு கடிப்பதால் பரவுக்கூடிய நோய் தான் டெங்கு. வைரஸ் கிருமியால் வரும் இந்நோயை உருவாக்கும் கொசு பொதுவாக நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. இவை பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். டெங்கு காய்ச்சல் உள்ள ஒரு நபரை கடிப்பதன் மூலம் கொசுவின் வாயில் வைரஸ் ஒட்டிக்கொள்கிறது. அது மற்றொரு நபரை கடிப்பதன் மூலம் பரவுகிறது. 

தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

இரத்த வெள்ளையணுக்கள் (தட்டணுக்கள்):

உடலுக்குள் டெங்கு வைரஸ் முதலில் ரத்த வெள்ளையணுக்கலீல் நுழைந்து பெருகி ஆரோக்கியமான இரத்த வெள்ளையணுக்களை அழிக்கிறது. இதனால், மிக வேகமாக இரத்த தட்டணுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. ஆரோக்கியமான நபருக்கு தோராயமாக ஒரு கியூபிக் மில்லி மீட்டர் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரையிலான ரத்த தட்டணுக்கள் இருக்கும். டெங்கு நோயாளிகளுக்கு அது 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துவிடும். சிலருக்கு 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து உயிரிழப்பை விளைவித்துவிடும்.

வீட்டில் கொசு தொல்லையா?

அறிகுறிகள்:

எல்லா காய்ச்சலுமே டெங்கு தான்  என்று சொல்ல முடியாது. சாதாரணமான காய்ச்சலாக இருந்தால் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், டெங்கு காய்ச்சல் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களை வரை குறையாமல் இருக்கும்.

  • கடுமையான காய்ச்சல்
  • தலைவலி
  • உடல்வலி
  • உடல்சோர்வு
  • வயிற்று வலி
  • உடல் மூட்டுகளில் கடும் வலி
  • வாந்தி உணர்வு  
  • உடலில் சிவப்பு புள்ளிகள்

சிலருக்கு சாதாரண காய்ச்சல் போன்று தான் இருக்கும், ஆனால் இரத்தம் உறைவதற்கு உதவும் முக்கியமான வெள்ளை அணுக்களை அழித்து அதன் எண்ணிக்கையை குறைத்துவிடும்.

உடலில் இரத்தப்போக்குடன் உண்டாக்கக்கூடிய டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தினால் ரொம்ப எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

பன்றி காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்..

டெங்குவை விரட்டியடுக்கும் வீட்டு வைத்தியம்:

இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்கலாம். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலுடன் தலைவலி, வயிற்று வலி, மூட்டு வலி, வாந்தி இருந்தால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகினால் பேராபத்தை தடுக்கலாம். இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனையின் படி சில இயற்கை வீட்டு வைத்தியத்தையும் கடைப்பிடிக்கலாம். இது பக்கவிளைவுகளை உண்டாக்காது. 

பப்பாளி

பப்பாளி மரத்தின் இலையை சுத்தம் செய்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறாக்கி மெல்லிய துணியில் வடிகட்டி 10 மிலி அளவு குடிக்கலாம். இது டெங்கு காய்ச்சலால் இழக்கப்படும் அதிகப்படியான வெள்ளை அணுக்களை மேலும் இழக்க வைக்காமல் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. 

பப்பாளியின் நன்மைகளை பாருங்க..

நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு பொடி, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிட்டு வந்து வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீரில் 1/2 ஸ்பூன் பொடி போட்டு கால் டம்ளராக சுண்ட வைத்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

துளசி

ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து 2 டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை வேளையில் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ கொடுக்கலாம். அல்லது துளசியை வெறுமனே மென்றும் சாற்றை விழுங்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்