தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழர் திருநாளாம் தை திருநாளில் வீட்டிலேயே பொங்கல் செய்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக வரவேற்பர். இந்த சிறப்பான நாளில் எந்த வகையான பொங்கல் செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா.? இதோ உங்களுக்கு மிகவும் விருப்பமான வகையில் செய்யப்படும் அக்கார வடிசல் செய்வது எப்படி என்று இதில் பார்க்கலாம்.
அக்கார வடிசல் என்பது அனைத்து கோவிலும் கொடுக்கும் ஒரு பிரசாதம் ஆகும். இதன் சுவையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை .மேலும் இதன் தெய்வீக தண்மை மற்றும் இதன் மருத்துவ குணம் இதில் அதிகம் உள்ளது மறுக்க முடியாது இது அதிகமாக மார்கழி மாதத்தில் தான் கிடைக்கும் .இதை எப்படிச் செய்து அசத்துவது என்று பார்க்கலாம். வாங்க இதைச் செய்யவதை எப்படி என்று பார்க்கலாம் .
அரிசி
பால்
நெய்
பருப்பு
முந்திரி
ஏலக்காய்
பாதாம்
குங்கும பூ
வெள்ளம்
அரிசியைப் பாலில் 2 மணி நேரம் ஊறவைக்கவும் . அதேபோல் குங்குமப் பூவையும் ஊறவைக்க வேண்டும் .
பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரிசி ,பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும் .பின் அதை எடுத்து வேகவைக்கவும். அதில் சரியான முறையில் வெந்தவுடன் அதில் பால் ஊற்றிக் கிளறவும் . அடுத்து ஒரு கடாயில் வெல்லத்தைச் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும் .பின் அதை அரிசியுடன்
சேர்த்துக் கிளறவும் .
பின் கடாயில் நெய் விட்டு அதில் பாதாம் சேர்த்து வறுத்து பின் அதை கலப்பையில் கலக்கவும் . பின்னர் இதில் குங்குமப்பூ ஊறவைத்தது சேர்க்கவும் . இதனுடன் ஏலக்காய் ,பச்சை கற்பூரம் உண்ணக்கூடியது மருத்துவ குணம் உடையது. நெய்யில் வறுத்தாக முந்திரியைச் சேர்த்தால் சுவையான அக்கார வடிசல் பிரசாதம் தயார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…