பொதுவாக மார்கழி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பக்தர்கள் வழிபட்டு வருவார்கள். இந்த மாதத்தில் பல சிறப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த குளிரான மாத்தில் ஒரு சூடான சூப்பரான பாயசம் பற்றிப் பார்க்கலாம்.
பொதுவாகப் பாயசம் என்றாலே சேமியா பாயசம் தற்பொழுது இருக்கும் மிக்ஸ் தான் ஞாபகம் வரும். ஆனால் இப்ப பார்க்கும் பாயசம் குதிரைவாலி பாயசம் ஆகும் . குதிரைவாலி என்பது அரிசி வகையாகும் . இதில் அதிக சத்துக்கள் உள்ளன. அதில் வைட்டமின் எ, பி, சி, ட எனப் பல சத்துக்கள்.இதில் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட இந்த அரிசியில் ஒரு பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குதிரைவாலி அரிசி 1 1/2 கப்
பால் 1 கப்
நெய் 3 ஸ்பூன்
முந்திரி
ஏலக்காய்
பாதம்
பாகு வெள்ளம்
பாயசம் செய்ய முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும் .பின் அதை அலசி குலைந்த படி வேக விடவும் .
பின் ஒரு கடாயில் நெய்விட்டு அதில் பாதாமை வறுத்து எடுக்கவும். பின் முந்திரியையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி நன்கு குலைத்த படி வெந்தவுடன் அதில் பால் ஊற்றிக் கிளறவும் .அடுத்து அதில் வறுத்த பாதாம் முந்திரியைச் சேர்க்கவும் . அடுத்து அதில் வறுத்த முந்திரி பாதாம் சேர்த்துக் கிளறவும் . பின் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு.
ஒரு கடாயில் பாகு வெள்ளம் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். இது பாயசத்தின் டேஸ்ட்டை கூட்டும் .
பின் அதை ஏற்கனவே உள்ள பாயசத்தில் போட்டுக் கிளறவும் . அவ்வளவுதான் இந்த பாயசம் .சுவையான சத்துள்ள பாயசம் தயாராகியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…