Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தனிக்கக் குளிர்ச்சியாகத் தயிர் பூரி செய்வது எப்படி

Vaishnavi Subramani Updated:
கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தனிக்கக் குளிர்ச்சியாகத் தயிர் பூரி செய்வது எப்படி Representative Image.

கோடைக்காலம் வந்தாலே காரம் ஆகச் சாப்பிடக் கூடாது எனப் பலரும் தவிர்ப்பார்கள். குளிர்ச்சியாகத் தான் சாப்பிடவேண்டும் எனப் பலரும் சொல்லுவார்கள். குளிர்ச்சியாகத் தயிர் மற்றும் இளநீர், பழ வகை சாறுகள் குடிப்பார்கள்.ஆனால் காரமாகவும் மற்றும் குளிர்ச்சியாகவும் ஒரு ரெசிபி இருந்தால் எப்படி இருக்கும்.இந்த பதிவில் கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தனிக்கக் குளிர்ச்சியாக ஒரு தயிர் பூரி ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தனிக்கக் குளிர்ச்சியாகத் தயிர் பூரி செய்வது எப்படி Representative Image

தேவையான பொருள்கள்

✤ தயிர் – 1 கப்

✤ பானி பூரி-10

உருளைக் கிழங்கு மசாலா செய்யத் தேவையான பொருள்கள்

✤ உப்பு – சிறிதளவு

✤ உருளைக்கிழங்கு – 6

✤ சாட் மசாலா தூள் – 3 டிஸ்பூன்

✤  வெங்காயம் – 4

✤ தக்காளி – 3

✤ சிவப்பு மிளகாய்த் தூள் – ½ டிஸ்பூன்

✤ புளி மற்றும் கொத்தமல்லி சட்னி தேவையான அளவு

கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தனிக்கக் குளிர்ச்சியாகத் தயிர் பூரி செய்வது எப்படி Representative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கைப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். கழுவிய பின், அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் நான்கு வெங்காயத்தை எடுத்து தோல் உறித்து அதை நன்றாகக் கழுவ வேண்டும். கழுவிய பின், அதை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் தக்காளியைக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்துத் தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தனிக்கக் குளிர்ச்சியாகத் தயிர் பூரி செய்வது எப்படி Representative Image

✤ அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து கொள்ள வேண்டும். அத்துடன் அரை டிஸ்பூன் அளவிற்குச் சிகப்பு மிளகாய்ப் பொடி மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.

✤ அதில் மூன்று டிஸ்பூன் அளவிற்கு சாட் மசாலா சேர்த்து நன்றாகக் கலந்தால் உருளைக்கிழங்கு மசாலா தயார்.

✤ பானிபூரியை ஒரு தட்டில் சிறிதளவு உடைத்து வைத்து அதில் உருளைக்கிழங்கு மசாலா மற்றும் புளி சட்னி, அத்துடன் தயிர் சேர்த்து அதற்கு மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்தால் தயிர் பூரி தயார். இந்த வெயில் காலத்தில் குளிர்ச்சியாகத் தயிர் பூரி சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்