தினமும் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவீர்கள் மற்றும் குழந்தைகள் பலரும் தினமும் ஒரே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. அதனால் புதிதாக என்ன செய்யலாம் என நீங்கள் யோசிக்கிறீர்களா.
இன்றைக்கு நீங்கள் இந்த அரிசி கட்லெட் செய்தால் புதியதாகவும் மற்றும் மதியம் குறைவாக உணவு சாப்பிட்டாலும் மற்றும் மதியம் சாப்பிடவில்லை என்றாலும் இதைச் சாப்பிடும் போது உணவு முழுமையடையும். இந்த பதிவில் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாக அரிசி கட்லெட் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ ரவை – 2ஸ்பூன்
✤ சமைத்த அரிசி சாதம் – 1கப்
✤ சோளம் – 1/2கப்
✤ மஞ்சள் தூள் – சிறிதளவு
✤ உப்பு – சிறிதளவு
✤ எண்ணெய் – 2ஸ்பூன் (ஆலிவ் எண்ணெய் )
✤ வெங்காயம் – 1
✤ இஞ்சி, பூண்டு விழுது – 1ஸ்பூன்
✤ கொத்தமல்லி தூள் – ½ ஸ்பூன்
✤ மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன் (சிகப்பு மிளகாய்த் தூள் )
✤ முதலில் வெங்காயம் எடுத்துத் தோல் உறித்து அதைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். வேக வைக்காத சோளம் எடுத்து அதை நன்றாகக் கழுவி வேக வைக்க வேண்டும்.
✤ வேக வைத்த சோளத்தை அரை கப் அளவிற்கு எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். சூடான பின்,அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
✤ வெங்காயம் நிறம் மாறிய பிறகு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சிகப்பு மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் அளவிற்குச் சேர்க்க வேண்டும்.
✤ அத்துடன் அரை ஸ்பூன் அளவிற்குக் கொத்தமல்லி தூள் சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
✤ நன்றாக வதக்கிய பின், அதில் வேகவைத்த சோளத்தை நன்றாக மசித்துச் சேர்க்க வேண்டும். இதை நன்றாக வதக்கி இறக்க வேண்டும்.
✤ இதில் உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் சேர்க்க வேண்டும் என்றாலும் கூட சேர்க்கலாம். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ரவையைச் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
✤ ரவை பொன்னிறமாக வந்த உடன் அடுப்பை அணைக்க வேண்டும். சமைத்த அரிசி சாதம் ஒரு கப் அளவிற்கு எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
✤ அத்துடன் வதக்கிய சோளம் கலவையைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அத்துடன் ரவையைச் சேர்த்து நன்றாகக் கலக்கினால் அரிசி கட்லெட் கலவை தயார்.
✤ அடுப்பில் பாத்திரத்தை வைத்துப் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாகச் சூடாக்க வேண்டும்.
✤ அதற்குப் பின், அந்த கலவையைச் சிறிய சிறிய உருண்டையாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதை எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ அதில் கொத்தமல்லி வைத்து அலங்கரித்தால் சூடான சுவையான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் தயார். இத்துடன் சட்னி அல்லது தக்காளி சாஸ் சேர்த்து சுவையாக உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…