பொதுவாகப் பலரும் சிக்கன், மட்டன் எனச் சாப்பிடுவார்கள். பலரும் அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் வெயில் காலத்தில் அசைவம் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள். வெயில் காலத்தில் உடலில் பல பிரச்சனைகள் வரும் என நினைத்துத் தவிர்ப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல. சிக்கன் தான் அதிகமான சூட்டை உடலில் ஏற்படும். ஆனால் மட்டன் உடல் சூட்டைத் தனிக்கும். இந்த பதிவில் மட்டன் உப்பு கறி எப்படிச் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ சோம்பு – சிறிதளவு
✤ சின்ன வெங்காயம் – 20
✤ மட்டன் – 300 கிராம் (எலும்பில்லாத மட்டன்)
✤ மஞ்சள் தூள் – சிறிதளவு
✤ கருவேப்பிலை – சிறிதளவு
✤ உப்பு – சிறிதளவு
✤ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
✤ தக்காளி – 1
✤ வரமிளகாய் – 10 (குண்டு வரமிளகாய்)
✤ பூண்டு – 10 பற்கள்
✤ இஞ்சி – 1
✤ முதலில் சின்ன வெங்காயத்தை உளித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். எலும்பில்லாத மட்டன் 300 கிராம் நன்றாகக் கழுவ வேண்டும். இஞ்சியின் தோல் உரித்து நன்றாகக் கழுவ வேண்டும்.
✤ தக்காளியை எடுத்து நன்றாகக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டை எடுத்துத் தோல் உரிக்க வேண்டும். தோல் உரித்த பூண்டை நன்றாக உரலில் வைத்துத் தட்ட வேண்டும்.
✤ முதலில் ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாகச் சூடாக விட வேண்டும். சூடான பின், அதில் சோம்பு சிறிதளவு சேர்த்துப் பொரிந்து வரும் வரை விட வேண்டும்.
✤ அதற்குப் பின், அதில் தட்டிய பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை எடுத்து இதில் போட்டு வதக்க வேண்டும்.
✤ வெங்காயம் சிவந்து வரும் வரை வதக்க வேண்டும். அதற்குப் பின், அதில் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✤ அத்துடன் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதற்குப் பின், ஐந்து வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதற்குப் பின், எலும்பில்லாத மட்டன் அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
✤ சிறிது நேரம் வதக்கிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில் மூடி போட்டு விசில் போட்டு ஒரு மூன்றிலிருந்து ஐந்து விசில் வரும் வரை விட வேண்டும்.
✤ மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அத்துடன் மீதமுள்ள வெங்காயம் மற்றும் ஐந்து மிளகாய் சேர்க்க வேண்டும்.
✤ அத்துடன் கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு தூவி விட வேண்டும். அதன் பின், குக்கரில் வெந்த கறியை எடுத்து இதில் சேர்க்க வேண்டும்.
✤ தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர் வற்றிய பின், ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் மட்டன் உப்பு கறி தயார். சூடான மற்றும் சுவையான மட்டன் உப்பு கறி தயார்.
✤ வெயில் காலத்திலும் இந்த மாதிரி மட்டன் உப்பு கறி செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள சூட்டைத்தனிக்கும் மற்றும் சுவையான மட்டன் உப்பு கறி சாப்பிடலாம். மட்டன் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…