உகாதி பண்டிகை என்பது தமிழ் மற்றும் மலையாள மாதங்களில் எப்படி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதோ, அதைப்போலவே தெலுங்கு மற்றும் கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு அல்லது உகாதி என்று சொல்லுவார்கள். இந்த உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கொண்டு, யுகாதி அல்லது உகாதி பச்சடி,போளி மற்றும் பூர்ணம் போன்றவை அறுசுவையாக சமைத்து பண்டிகை கொண்டாடுவார்கள். இந்த வருட யுகாதி பண்டிகையை ஒரு இனிப்பான தேங்காய் போளி செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் ஒரு இனிப்பான தேங்காய் போளி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ வெல்லம் – 1 1/2கப்
✤ மஞ்சள் தூள் – சிறிதளவு
✤ மைதா – 2கப்
✤ வெள்ளைரவை – 2டேபிள் ஸ்பூன்
✤ தேங்காய் – 1
✤ ஏலக்காய் -5
✤ நெய் –4டேபிள்ஸ்பூன்
✤ தண்ணீர் – 1கப்
✤ வாழை இலை – 1
✤ முதலில் ஒரு தேங்காய் எடுத்து இரண்டாக உடைத்து, அதை நன்றாக துருவ வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடு செய்ய வேண்டும்.
✤ அதில் வெல்லம் சேர்க்க வேண்டும். அது நன்றாக கரைந்து வரும் வரை அடுப்பை குறைவாக வைக்க வேண்டும். நன்றாக கரைந்து, பாவு பதத்திற்கு வந்த உடன் அதில் துருவிய தேங்காயை சேர்த்து இறக்க வேண்டும்.
✤ மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு மைதா மற்றும் இரண்டு டேபிஸ்பூன் அளவிற்கு வெள்ளை ரவையை சேர்த்த நன்றாக கலக்க வேண்டும். ஐந்து ஏலக்காயை நன்றாக தட்டிகொள்ள வேண்டும்.
✤ தட்டியை ஏலக்காய் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள், கலக்கிய கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
✤ கலக்கிய கலவையில் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை ஒரு தட்டு போட்டு மூடி 30 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.
✤ அதன் பின் அந்த மாவை எடுத்து நன்றாக சிறிய சிறிய உருண்டையாக பிடித்து கொள்ள வேண்டும். அதில் சிறிய ஓட்டை போட்டு, அதில் செய்த தேங்காய்பாவு கலவையை வைத்து மீண்டும் உருண்டையாக பிடிக்க வேண்டும்.
✤ ஒரு பத்து உருண்டைகள் பிடித்த உடன், அடுப்பில் தோசை கல் வைத்து அது சூடாக்க வேண்டும். அதில் நெய் சிறிதளவு தெளித்து கொள்ள வேண்டும்.
✤ உருட்டிய உருண்டையை எடுத்து வாழை இலையில் நெய் சிறிதளவு சேர்த்து அத்துடன் உருண்டையை வைத்து ஒரு தட்டு தட்டி தோசை கல்லில் போட வேண்டும்.
✤ ஒரு பக்கம் வெந்த உடன் அடுத்த பக்கம் திருப்பி போட வேண்டும். வெந்த உடன் எடுத்து வாழை இலையில் வைத்து பரிமாறலாம்.
✤ சூடான மற்றும் சுவையான தேங்காய் போளி தயார். இந்த வருட உகாதி பண்டிகை மற்றும் தொலுங்கு வருட பிறப்பிற்கு, இந்த தேங்காய் போளி செய்து கொண்டாடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…