இந்த திருவாதிரையில் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று இனிப்பு பிரசாதம். அந்த இனிப்பு பிரசாதத்தின் சிறப்பான ஒன்றாக குறிப்பிடுவது கச்சாயம். அதிலும் திருச்சி சிறப்பான திருவாதிரை கச்சாயத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤இட்லி அரிசி - 4 கப்
✤உளுத்த பருப்பு - 1 கப்
✤தேங்காய் - 1 கப்
✤வெல்லம் - 1½ கப்
✤உப்பு - 1 சிட்டிகை
✤ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
✤கருப்பு அல்லது வெள்ளை எள் - 1½ டேபிள்ஸ்பூன்
✤எண்ணெய் - ½ லிட்டர்
✤முதலில் ஒரு பாத்திரத்தில் நான்கு கப் அளவிற்கு இட்லி அரிசி மற்றும் ஒரு கப் அளவிற்கு உளுத்த பருப்பு சேர்த்து மூன்று முதல் நான்கு முறை வரை நன்றாக கழுவிக் எடுத்து வைக்கவும்..
✤அதன் பின் அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
✤மற்றொரு பாத்திரத்தில் கடலைப் பருப்பு சேர்த்து 3-4 முறை நன்றாக கழுவிக் கொள்ளவும். இதையும் நன்றாக ஊறவைக்கவும்.
✤தேங்காயை நன்றாகத் துருவி ஒரு கப் அளவிற்கு எடுத்து வைக்கவும்.
✤மற்றொரு பாத்திரத்தில் ஒன்றை கப் அளவிற்கு உடைத்த வெல்லம் சேர்த்து நன்றாகக் கரைத்துக் வடிக்கட்டிக் வைக்கவும்.
✤மிக்ஸியில் ஊறவைத்த அரிசி மற்றும் உளுத்த பருப்பு சேர்த்து, அத்துடன் கரைத்த வெல்லத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாக அரைத்துக் வைக்கவும்.
✤அரைத்த கலவையுடன், ஊறவைத்த கடலை பருப்பு, துருவிய தேங்காய், உப்பு, ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த் தூள், ஒன்றறை டேபிள்ஸ்பூன் வெள்ளை அல்லது கருப்பு எள் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். கச்சாயம் செய்ய மாவுக் கலவைத் தயாராக உள்ளது..
✤ஒரு வாணலிலை எண்ணெய் சேர்த்து மிதமாகச் சூடான பின், அதில் இந்த மாவு கலவையைச் சிறிது சிறிதாக வட்டவடிவில் சேர்த்து பொரித்து எடுத்தால் கச்சாயம் ரெடி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…