இந்த வருடம் குடியரசு தின விழா ஜனவரி 26 அன்று கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் வீட்டிலேயே ஒரு இனிப்பு வகையான ஒரு ரெசிபி!!. அதுவும் மூவர்ண நிறத்தில் நம் பாரம்பரியமான உணவு வகையில் மூவர்ண தேங்காய் லட்டு (Tricolor Coconut Ladoo) மற்றும் மூவர்ண ரசகுல்லா (Tricolor Rasgulla) மற்றும் மூவர்ண இட்லி (Tricolor Idli) இதுமட்டுமில்லாமல் பல்வேறு வகையான ரெசிபி உள்ளது.
இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி ஒரு இனிப்பு வகையான குடியரசு தின ஸ்பெஷல் தேங்காய் லட்டு ரெசிபி. சரிவாங்க எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
✤கெட்டியான பால் - 400 கிராம்
✤நெய் - 2 டீஸ்பூன்
✤துருவிய தேங்காய் - ½ கப்
✤ பால் - 4 டீஸ்பூன்
✤பச்சை, ஆரஞ்சு உணவு நிறப் பொடி - 1 சிட்டிகை அளவு
✤ஏலக்காய் பவுடர் -சிறிதளவு
✤முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடான பிறகு, அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤அத்துடன் கெட்டியான பால் சேர்த்து நன்றாகக் கெட்டியாக மாவு பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
✤அதில் ஏலக்காய்த் தூள் சேர்த்து, நான்கு டீஸ்பூன் பால் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு,அதை மூன்று பகுதியாகப் பிரித்துக் கொள்ளவும்.
✤முதல் பகுதி வெள்ளை நிறத்திற்கு,இரண்டாம் பகுதி மாவில் ஒரு சிட்டிகை அளவிற்கு ஆரஞ்சு நிற உணவு நிறப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கினால் ஆரஞ்சு நிறம் கிடைக்கும்.
✤மூன்றாவது பகுதியில் ஒரு சிட்டிகை அளவிற்குப் பச்சை நிற உணவு நிறப் பொடியைக் கலக்கிக் கொண்டு உருண்டை வடிவில் நன்றாக உருட்டிக் கொண்டால் சூடான சுவையான மூவர்ண தேங்காய் லட்டு தயார்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்!!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…