காதல் என்பது ஒரு அழகான உணர்வு. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த காதல் எப்படி மலருகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஒருவருக்குள் இந்த காதல் வந்துவிட்டால், வாழ்க்கையில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடேது. அதே சமயம், எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியுமோ, அதே அளவிற்கு வலியையும் இந்த காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அத்தகைய வலிகளை கவிதைகளாக இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.
1. காத்திருக்கும் போது தெரிவதில்லை கடந்து போகும் காலங்கள் ஏமாற்றத்தின் பின்பே உணரமுடிகிறது காத்திருந்த காலங்கள்..
2. நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்..
3. நம்ம இல்லாம சந்தோஷமா இருப்பாங்கன்னா... விலகியும் போகலாம், விட்டும் போகலாம். தப்பே இல்ல. போகட்டும் விடுங்க..
4. நேரமில்லாத நேரத்திலும் உன்னுடன் பேசினேன்! நீ நேரம் போவதற்காக, பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்...
5. இந்த ஏமாற்றத்திற்கும் வலிக்கும் காரணம் நான் அன்று உனக்காக என்னை மாற்றிக் கொண்டது மட்டுமே..
6. தனிமையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள் இறுதி வரை உன்னிடம் வர மாட்டார்கள்..
7. நாம் பிறருக்கு தேவை என்றால் கண்டுகொள்ளப்படுகிறோம் கவனிக்கப்படுகிறோம் அதுவே தேவையில்லை என்றால் காயப்படுத்தப்படுகிறோம் கழட்டிவிடபடுகிறோம்...
8. வேண்டும்போது கிடைக்காத காதலும் வேண்டாத போது கிடைக்கும் காதலும் உயிரற்றதுதான்..
9. சில நினைவுகள் நம்மை அழ வைக்கும் சிலருடைய நினைவுகள் அழ மட்டுமே வைக்கும்..
10. காதல் சிரிக்க வைப்பது போல் சிரிக்க வைக்கும்.. ஆனால்.. நிச்சயம் ஒரு நாள் அழ வைக்கும்...!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…