இந்த உலகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அதிசய உணர்வு தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காத மானுடரே இல்லை. அதை விரும்பாதவர்களும் இல்லை. பாசம், அன்பு போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்கும் இந்த காதல் யார் மீது வேண்டுமானாலும் மலரும். அந்த காதலை நீங்கள் நேசிப்பவரிடம் வெளிப்படுத்த பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் கவிதைகள். காதல் என்ற கவிதையை அழகாகவும், ஆழமாகவும் நீங்கள் நேசிப்பவரிடம் கூற இந்த கவிதைகளால் மட்டுமே முடியும். இதோ உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்த சில அழகான காதல் கவிதைகளை கொடுத்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து உங்கள் அன்பிற்கு உரியவர்களுக்கு அனுப்பி உங்களுடைய காதலை தெரியப்படுத்துங்கள்.
1. துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்!
2. மொழிகள் என்பதே
தேவையில்லை நம்முடைய
இதழ்கள் இரண்டும்
பேசிக் கொள்கையில்...
3. அன்பு யார் மீது
வேண்டுமானாலும்
காட்டமுடியும்,
ஆனால் கோபம்
உரிமை உள்ளவர்
இடத்தில் மட்டுமே
காட்டமுடியும்..
4. என் வாழ்வில்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூற நீ துணையாய்
இருக்கும் போது..
5. அழகானவர்களை
பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான்
அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை.
6. என்னை அழகாக்க
உன் நினைவு வேண்டும்.
என் வாழ்க்கையை அழகாக்க
நீ வேண்டும்...
7. நிஜமாய் மாறிய கனவு நீ
கனவிலும் இழக்க முடியாத உறவு நீ
நிஜத்திலும் கனவிலும்
நான் தேடும் அன்பு நீ!
8. காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீ இருந்தால்..
9. உன்னைத் தொட்டுத்
தழுவாமல் என் நாட்கள்
தொடரவும் தொடராது..
முடியவும் முடியாது...
10. நீயே கேட்டாலும்
விட்டு கொடுப்பதாக
இல்லை, உன் மீதான
என் காதலை!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…