இந்த 2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி புனித வெள்ளி தினம் கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளி கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இதற்கென தனி வரலாறே உள்ளது. புனித வெள்ளி பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள் சிலவற்றைக் காணலாம்.
கிறிஸ்தவர்களின் சமூகத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ள இந்த விழாவானது ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் மற்றும் மாண்டி வியாழனுக்குப் பின் அனுசரிக்கப்படுவதாகும். இது ஒரு நாள் கொண்டாடப்படுவது அல்ல். ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் சிறப்புப் பண்டிகையாகும். அதாவது, பாம் ஞாயிறு, புனித திங்கள், புனித செவ்வாய், புனித புதன், மாண்டி வியாழன், புனித வெள்ளி, மற்றும் புனித சனி போன்ற முக்கிய நாள்களை உள்ளடக்கியதே புனித வெள்ளி வாரம் ஆகும். இது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகளைப் பற்றி இதில் காணலாம்.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் மற்ற பண்டிகை நாள்களைப் போல புனித வெள்ளி அமையாது. ஆண்டுதோறும் புனித வெள்ளி கொண்டாடப்படும் தினம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதாவது, வசந்த உத்தராயணத்திற்குப் பின் வரும் முதல் முழு நிலவுக்கு அடுத்த வெள்ளிக்கிழமையே புனித வெள்ளி வருகிறது. இந்த நாள் ஆனது சந்திர நாட்காட்டியின் படி கொண்டாடப்படுகிறது.
புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக செய்யப்படும் இனிப்பு, விருந்துகள் போன்றவை நல்ல அதிர்ஷ்டத்தை ஊட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதில், கூறப்படும் நல்லவை என்பது பெரும்பாலானோர் மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால், இது ஒரு துக்க நாள். ஏனெனில், துக்க நாளாக இருப்பினும் இறுதி முடிவு நன்றாக இருந்ததால் நல்லது எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், இந்த நாளானது கருப்பு வெள்ளி எனவும் குறிப்பிடப்படுகிறது. புராணக் கதைகளின் படி, இந்த நாளில் ஹாட் கிராஸ் ரொட்டியைப் பகிர்ந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை என்றால் முடி வெட்டக் கூடாது என சிலர் கூறுவர். ஆனால், புனித வெள்ளி அன்று முடி வெட்டினால், ஆண்டு முழுவதும் தலைவலி வராமல் தடுக்கப்படும் என்பது ஐதீகம்.
இவை அனைத்தும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…