மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. மார்கழி மாதம் என்றதுமே நம் நினைவிற்கு எட்டுவது அழகான வண்ண வண்ண கோலங்கள் தான். இந்த மாதத்தில் பெண்கள் அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசல் பெருக்கி சாணம் தெளித்து கோலம் போடுவது வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், மார்கழி மாதத்தில் ஓசோன் படலமானது, பூமிக்கு மிக அருகில் இருக்குமாம். அந்த சமயத்தில் பெண்கள் எழுந்து வாசலில் கோலம் போடுவதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.
இதன் மூலம் உடலில் கூடியிருக்கும் அசுத்த காற்றான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி சுத்தமான ஆக்சிஜனை பெறுவதால், இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது. அதேபோல், மார்கழி மாதத்தில் போடும் கோலத்தை கோலமாவில் போடாமல் அரிசி மாவில் போடுவது சிறந்தது. அப்படி இல்லையென்றால், கோலமாவையும் அரிசி மாவையும் கலந்துக் கூட போடலாம். இதோ உங்க வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் லேட்டஸ்ட் மார்கழிக் கோலங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…