Sai Baba History in Tamil: கடந்த பதிவில், சாய்பாபாவின் சக்தியை சோதித்த பக்தன் ஒருவர், அவனது தவற்றை உணர்ந்து சாய்பாபாவிடம் வந்து மன்னிப்பு கோரினார். எல்லா வேதங்களையும் அறிந்தருளும் சாய்பாபா படிப்பதை யாருமே பார்த்ததில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் எப்படி அனைத்தையும் கற்றுக் கொண்டார். இந்தப் பதிவில் சாய்பாபாவின் அற்புதங்களைக் காண்போம்.
சாய்பாபாவைக் காண வரும் பக்தர்கள், அவருக்கு வேதாந்த நூல்களையும், பல்வேறு புராணங்களையும் கொண்டு வந்து தருவார்கள். சாயிபாபா அந்த புத்தகங்களை புரட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொடுத்து விடுவார். அதே சமயம், அவற்றில் உள்ள கருத்துக்களை பிறகு தாமே சொல்லுவார். இது போலவே, பக்தர்களிடம் பகவத் கீதை, பாகவதம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றின் சுலோகங்களைக் குறிப்பிட்டுப் பாரயணம் செய்யும் படி கூறுவார்.
தன்னைக் காண வரும் பக்தர்களின் எதிர்காலத்தை தனது ஞான திருஷ்டியால் கண்டு பக்தர்களிடம் கூறுவார். இதனால், இவருடைய சொல்லை மீறி யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். அதே போல, பாபாவைத் தரிசிக்க வரும் பக்தர்கள், பாபாவின் உத்தரவு இல்லாமல் திரும்பிப் போக மாட்டார்கள். இவ்வாறு கிடைக்கும் அனுமதிக்கு ‘உதி’ என்று கூறுவர். இவ்வாறு உதி கிடைக்காமல், நிறைய பேர் பல நாள்கள் அங்கேயே தங்கி விடுவதும் உண்டு.
இவ்வாறு உதி பெற்றுச் சென்றால், அவர்களின் பயணத்தில் தடைகள் எதுவும் ஏற்படாது என்று கூறுவர். இதனை மீறி அவசரமாகத் திரும்பிச் சென்றால், வழியிலேயே அவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படும். விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. பிறகு, பாபாவிடமே மீண்டும் வந்து அருள் பெற்றுச் செல்வார்கள்.
பாபா எளிமையான தோற்றம் உடையவர் மட்டுமல்லாமல், எளிமையாக இருப்பதையே விரும்பினார். இதனால் தான், அன்றாடம் சாப்பிடுவதற்கான உணவுக்குக் கூட தெருவில் நடந்து போய் பிட்சை எடுத்து, வாங்கி வருவார். அதிலும் குறிப்பாக ஐந்து வீடுகளுக்கு மேல் போய் கேட்க மாட்டார். ஷீரடி மக்களும் சாய்பாபாவிற்கு உணவளிப்பதை பெருமையாகக் கருதினார்கள். சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…