நவராத்திரியின் 7ஆம் நாள் (Navratri Seventh Day) செல்வத்தின் திருவருமான மகாலட்சுமிக்குரிய தினம் ஆகும். இன்று மகாலட்சுமியை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் செய்ய வேண்டிய அலங்காரம், பிரசாதம் முதல் எந்த திருமந்திரம் உச்சரித்து அம்மாளை எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதிப்பது என்பது வரை கீழ்க்காணும் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி ஏழாம் நாள் பூஜை (Seventh Day Of Navratri Puja)
நவராத்திரியின் ஏழாம் நாள் மகாலட்சுமி தேவியை பூஜிக்க வேண்டும். செல்வமாக கருதும் அன்னை மகாலட்சுமி ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், சங்கு, சக்கரம், வஜ்ரம் போன்ற ஆயதங்களையும் தாமரை,மதுக்கலயம், கமண்டலம், மணி ஆகியவற்றைக் கொண்ட இறைவி ஆகும்.
அம்மாளுக்கு பூஜை செய்ய வெள்ளை மலர்களால் கோலமிட்டு (திட்டாணி) கொள்ளவும். தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை போன்ற மலர்களால் பூ அலங்காரம் செய்தல் வேண்டும். இறுதியாக பேரீச்சம் பழம் மற்றும் நைவேத்தியம் வைத்து தீபாராதனை செய்தல் நமக்கு செல்வ செழிப்பான வாழ்க்கை அளிக்கும். இவ்வாறு மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்வதால் வறுமையில் வாடும் பக்தர்கள் சிறப்பான வாழ்வாதாரத்தை அன்னை மகாலட்சுமி அளிப்பார்.
மந்திரம் (Navarathri Seventh Day Mantra):
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ
சௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri Seventh Day):
அனுஷம், சித்திரை, சுவாதி
பிரசாதம் (Seventh Day Of Navratri Prasadam):
மகாலட்சுமி தேவிக்கு நைவேத்தியம் படைக்க கற்கண்டு சாதம் செய்து பூஜித்து நம்மை நாடி வருபவர்களுக்கு பிரசாதமாக அளிப்பதால் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ முடியும்.
யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம்
1st நாள் | 4th நாள் | 7th நாள் |
2nd நாள் | 5th நாள் | 8th நாள் |
3rd நாள் | 6th நாள் | 9th நாள் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…