நவராத்திரியின் 8ஆம் நாள் (Navratri Eighth Day) வழிபட வேண்டிய தெய்வம் நரசிம்ஹி ஆகும், விஷ்ணு பகவானின் அவதாரமான நரசிம்மரின் சொரூபம் கொண்ட நரசிம்ஹி தேவிக்கு படைக்கும் நைவேத்தியம் முதல் எந்த திருமந்திரம் உச்சரித்து எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதிப்பது என்பதை காண்போம்.
நவராத்திரி எட்டாம் நாள் பூஜை (Eighth Day Of Navratri Puja)
நவராத்திரியின் எட்டாம் நாள் நாம் வழிபாடு செய்ய வேண்டிய இறைவி நரசிம்ஹி தேவி ஆகும். தன் பக்தன் பிரகலாதனைக் காக்க இறைவன் விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தின் சொரூபமாக ஆகும்.
இன்று அம்மாளுக்கு தாமரை கோலமிட்டு (காசு பத்மம்) சம்பங்கி மற்றும் மருதாணிப்பூ கொண்டு அலங்கரித்து கொள்ள வேண்டும். வழிபாட்டின் போது புன்னக வராளி ராகத்தில் வாசிக்க வேண்டும். நைவேத்தியத்துடன் திராட்சை வைத்து அஷ்டமி திதி பூஜிப்பது நமக்கு சகல ஐஸ்வரியங்கள் அளிக்கும்.
நவராத்திரி மந்திரம் (Navarathri Eighth Day Mantra):
ஓம் துர்காயை நம
ஓம் மஹா கௌர்யை நம
ஓம் மஹிஷாமர்த்தின்யை வித்ம்ஹே
துர்கா தேவ்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri Eighth Day):
மகம், பூரம், ரோகிணி நட்சத்திரம்
நவராத்திரி பிரசாதம் (Eighth Day Of Navratri Prasadam):
இன்று பால் பாயசம் செய்து அம்மாளுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்வதால் எதிரிகளால் வரும் இன்னல்களில் இருந்து நரசிம்ஹி தேவி காப்பாள்.
யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம்
1st நாள் | 4th நாள் | 7th நாள் |
2nd நாள் | 5th நாள் | 8th நாள் |
3rd நாள் | 6th நாள் | 9th நாள் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…